districts

img

நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் திருப்பூரில் புதிதாக கட்டப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சை

“நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் திருப்பூரில் புதிதாக கட்டப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு விருக்ஷா சர்வதேசப் பள்ளியின் 70 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து, அவர்களின் சேமிப்பு தொகை மற்றும் சிறு பொருட்கள் விற்பனை மூலம் பங்களிப்பு தொகையாக ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையை சனியன்று மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம், விருக்ஷா சர்வதேசப் பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் மற்றும் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.