திருப்பூர், நவ.4- அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத் திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சி. சித்ரா தலைமையில் திங்களன்று நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில், திருப்பூ ரில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பணியிட மாறுதல் வழங்கினார். அந்த ஆணை அடுத்த ஒரு வாரத்தில் அக்டோ பர் 7ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கான மாத ஊதியமும் வழங்கப்ப டவில்லை. எனவே பணியிட மாறுதல் வழங் கப்பட்ட இடத்திற்கே மீண்டும் பணி வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு பார்த்த அங் கன்வாடி ஊழியர்களுக்கு மூன்று நாட்க ளுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டத் தொகையை வழக்க வேண்டும். புகைப்ப டத்துடன் கூடிய டிஎச்ஆர் வழங்குவதைக் கைவிட வேண்டும். அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களினால் ஒரு ஊழியர் மூன்று மையங்களில் பொறுப்பு பார்க்கும் நிலை உள் ளது. எனவே திட்டத்தின் நோக்கம் நிறை வேறுவதில் சிரமம் உள்ளது. எனவே உடனடி யாக காலிப்பணியிடங்களை நிரப்பி திட் டத்தை செழுமைப்படுத்த வேண்டும். அங் கன்வாடியில் அதிகமான பணி, சுகாதாரத் துறை பணிகள் செய்யப்படுகின்றன. அத னால்தான் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 42 வயதில் விஎச்என் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இப்போராட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச்செயலாளர் டி. டெய்சி, மாவட்டச் செயலாளர் கே.சித்ரா ஆகி யோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், மாவட்டப் பொருளாளர் ஜி. சம்பத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.பாலன், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டு 1000திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உத வியாளர்கள் கலந்து கொண்டனர்.