districts

img

நீட் தேர்வை ரத்து செய்க திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

நாமக்கல், அக்.29- நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஞாயிறன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் குமாரபாளையம், ஜேகேகே நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பிராத்தனையில் கலந்து கொண்ட சிறுபான்மை மக்கள் மத்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் சேக் தாவூத் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் ஜூல்பிகார் அலி, ஜான் பீட்டர், நகர் மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம்  வடக்கு நகர திமுக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான  த.விஜய்கண்ணன், தெற்கு நகர திமுக செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் நிகழ்வினை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பங்கு தந்தை மற்றும் பேரவை உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள், திமுக மாவட்ட மற்றும் நகரக் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.