districts

சென்னிமலை முருகன் பெயரில் மோசடி

ஈரோடு, ஜன. 22- சென்னிமலையில் முருகன்  பெயரை சொல்லி தைப்பூச ஏலத் தில் நடக்க இருக்கும் மோசடிகள் தடுத்து நிறுத்தப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிம லையில் உள்ள முருகன் கோவி லில் தைப்பூச தேர்த்திருவிழா வரும்  25 ஆம் தேதி முதல் இம்மாத இறுதி  வரை நடைபெற உள்ளது. இத்தி ருவிழாவில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்பர். இந்த ஒரு வார  காலத்தில் பொது சுகாதாரப் பணி களை மேற்கொள்தல், குடிநீர்  வசதி, சாலையோரம் அமைக்கப் படும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலித்தல் மற்றும் ஒலி பெருக்கி மூலம் விளம்ப ரம் செய்தல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்படும்.  இப்பணிகளுக்கு  சென்னிமலை பேரூராட்சியின் சார் பில் பொது ஏலத்திற்கான ஒப் பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. உயர்ந்தபட்ச  ஏலம் கோரிய ஏல தாரருக்கு ஊர்ஜிதம் செய்யப்ப டும். தற்காலிக கடைகளுக்கு பேரூ ராட்சியால் நிர்ணயம் செய்யப் பட்ட தொகைகளை மட்டும் சுங்க  வசூல் செய்ய வேண்டும். அதற் கான ரசீது புத்தகங்களை ஏலதா ரரே சொந்த செலவில் அச்சடித்து பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்து முத்திரை பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் பேரூ ராட்சி செயல் அலுவலரால் அவ்வப் போது தெரிவிக்கப்படும் விதிமு றைகளுக்கும், நிபந்தனைகளுக் கும் ஏலதாரர் கட்டுப்பட வேண் டும் உள்ளிட்ட நிபந்தனைக ளுடன் ஒப்பந்தப் புள்ளிகள் வெளி யிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஒப்பந்த முறையால் பல்வேறு  மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட் டுகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, பொது சுகாதாரப் பணிகள் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுத்தல் என்ற பணியை  பேரூராட்சியே செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 2016  ஆம்  ஆண்டு முதல் அன்றைய அதிமுக  ஆட்சிக்காலத்தில், இதனை மாற்றி  தனியாருக்கு ஏலம் கொடுக்கப் பட்டது. இதில் மிகப்பெரிய ஊழல்  முறைகேடு நடைபெற்று வருவ தாக கூறப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களின் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் மோசடியாக செலவு செய்யப்படுவதாக தெரிகி றது. அதுமட்டுமின்றி, ஏலம் எடுப் பவர் சுகாதாரப் பணிகளுக்கு தூய்மை பணியாளர்களை அமர்த்தி, தெருவில் சேரும் குப்பை  குளங்களை அகற்ற வேண்டும். தேங்கும் குப்பைகளை தனியாக டிராக்டர் மூலம் அகற்றி வீதிகள் சுகாதாரமாக இருக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

கழிவறைகள் அமைத்து சுகாதாரம் பேணப்பட வேண்டும். தண்ணீர் பந்தல் மற்றும்  கழிவறைகளுக்கு தண்ணீர் பற்றாக் குறை இல்லாமல் ஏற்பாடு செய்ய  வேண்டும் உள்ளிட்டவை கூடுதல்  நிபந்தனைகளாக விதிக்கப்பட் டுள்ளன. இந்த கூடுதல் நிபந்தனை களாலும் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. அதிலும், தெருவோரம் வைக் கப்படும் தற்காலிக கடைகளுக்கு கடந்த ஆண்டு தினசரி கடைக்கு  ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட் டது.  ஆனால், தற்போதைய நடை முறையில் தொகை குறிப்பிடாமல் ரூ.200 முதல் ரூ.1000 வரை தினசரி வசூலிக்கப்படுகிறது. இதனால், தற்காலிக வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, தொகை குறிப்பிடாமல் ரசீது வழங்குவதைத் தடுத்து நிறுத்தி, தொகை குறிப்பிட்டு ரசீது  வழங்க வேண்டும். மேலும், விளம் பரம் செய்ய சட்டவிரோதமாக கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதை தடுத்து, சட்டப்படியும், நீதிமன்ற உத்தரவு படியும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சென்னிமலை பூப்பறிக்கும் மலை  பாதுகாப்பு இயக்கம், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக் கத்தினர் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.