districts

img

விதி மீறலை விதியாக்க வலியுறுத்தும் கல்குவாரி உரிமையாளர்கள்

திருப்பூர், ஜூன் 28- தமிழகத்தில் கல் குவாரிகளில் நடை பெற்று வரும் விதிமுறை மீறல்களையே விதி முறையாக அறிவிக்க வேண்டும் என்று கல் குவாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வரு கின்றனர். இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,  கல் குவாரிகளால் பாதிக்கப்படும் விவசாயி கள், பொது மக்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில்  அனுமதி வழங்கும் உரிமம் வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று சொல்லி, தற் போதுள்ள விதிமுறைகளை கைவிட வேண் டும் என்று சொல்லாமல் சொல்லி இருக் கின்றனர் கல்குவாரி உரிமையாளர்கள். தமிழ் நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமை யாளர்கள் சங்கம் இதற்காக தமிழகம் முழுவ தும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை செவ்வாய் முதல் தொடங்கியுள்ளனர். அதன்  ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலும் டிப்பர் லாரிகள் இயக்கப்படவில்லை.  தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி  உரிமையாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் கே.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்க ளிடம் கூறியதில், பணம் பறிக்கும் நோக்கில்  சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார்  கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கி றார். ஆனால் இவர்கள் அப்படி போலி சமூக  ஆர்வலர்கள் பணம் பறிப்பது பற்றி ஆதாரப் பூர்வமாக எவ்வித புகாரும் தெரிவிக்க வில்லை. அதேசமயம் கல்குவாரிகளால் பாதிக்கப்படுவோர் போராடும்போது அவர் களை இழிவுபடுத்தும் விதத்தில் பணம் பறிக் கும் போலி சமூக ஆர்வலர் கும்பல் என்று கொச்சைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும், கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல்  அனுமதி நீக்கம் செய்து தர வேண்டும். சுரங்க  திட்ட முறையை ரத்து செய்ய வேண்டும். ஐந்து ஹெக்டேருக்கு மேல் கல் குவாரி இருந் தால் அப்பகுதி மக்களின் கருத்து கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை 25 ஹெக் டேருக்கு மேல் இருந்தால்தான் பொதுமக்க ளிடம் கருத்து கேட்க வேண்டும். கல்குவாரி யில் குத்தகை பெற்ற பிறகு குத்தகை இடத் தில் கனிமத்தை வெட்டி எடுக்க அனுமதிக் கப்பட்ட அளவை விட கூடுதலாக எடுத்திருந் தால், அரசுக்கு செலுத்த வேண்டிய சீனி யரேஜ் கட்டணத்தை செலுத்த தயாராக இருக் கிறோம் என்றும் அவர் கூறினார். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றி சமூக விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில் நகரம், கிராமம் என வேறுபாடு இல் லாமல் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக் கள் கல்குவாரிகள் மட்டுமின்றி, இதர சூழல் மாசுபாடு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், நதிநீர் மாசுபடுத்தப்படுவது, வனங்கள் அழிப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வருவது கவனிக்கத்தக்கது. இத்தகைய சூழலில் கல்குவாரிகளுக் கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உண்மையில் சூழல் மாசு பாட்டை கண்டுகொள்ளாமல் விட வேண்டும்  என்பதே ஆகும். உண்மையில் இவர்கள் எவ் வித முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்கா மல் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்ப டுவதாக இருந்தால் யாரும் இவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்ப டாது. தற்பொழுது கல்குவாரியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் வெடி வைப்பதால் கற்கள் பறப்ப தில்லை என்று பாலசுப்பிரமணியம் கூறியி ருக்கிறார். இத்தகைய நவீன தொழில்நுட் பத்தை விதிமுறைப்படி பயன்படுத்துவதற்கு மாறாக அளவில்லாமல் பாறைகளை வெட்டி  பெருமளவு வருமானம் ஈட்டுவதற்கே பயன்ப டுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதை இவர்களால் மறுக்க முடியவில்லை. 

கல்குவாரியில் இருந்து குடியிருப்பு பகு திக்கு அங்கீகரிக்கப்பட்ட மனைகளுக்கு 300 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி வேண்டும் என்ற விதியை 100 மீட்டராக குறைக்க வேண் டும் என்றும் கேட்டிருக்கின்றனர். ஆனால் கல்  குவாரிகளில் அளவுக்கு அதிகமாக நவீனரக  வெடிகளை வெடிக்கச் செய்வதால் வரை யறுக்கப்பட்ட எல்லைக்கும் அப்பால் பல  கிலோமீட்டர் தூரத்துக்கு அதிர்வை உணர்ந்த தாக காங்கேயம் உள்ளிட்ட வட்டாரங்களில் மக்கள் தெரிவித்தனர். இப்படி எல்லா வகை யிலும் விதிமீறலை வரம்பில்லாமல் செய்து விட்டு, குடியிருப்புகளுக்கான பாதுகாப்பு இடைவெளியை 100 மீட்டராக குறைக்க வேண்டும் என்பது மக்கள் உயிரைப் பற்றி  கிஞ்சித்தும் கவலைப்படாத போக்கே ஆகும்.  கல் குவாரிகளில் பல்லாயிரம் தொழிலா ளர்கள், அவர்களின் குடும்பங்கள் இத்தொ ழிலை நம்பி வாழ்வது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு எங் குமே வழங்கப்படுவதில்லை. கொத்தடிமை களாக வேலை செய்யும் நிலையில் பலர் சிக்கி யுள்ளனர். அவர்களுக்கு உரிய சட்ட, சமூகப்  பாதுகாப்பை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமவளக் கொள்ளையை அனுமதிக்க முடியாது என்று  அறிவித்திருக்கிறார். நவீன தொழில் வளர்ச்சி, உள்கட்டுமானங்களுக்கு கல் குவாரி தொழில் அவசியத் தேவைதான். ஆனால் இயற்கை வளங்களை வரம்பின்றி சுரண்டி கொளுத்த லாபம் பார்ப்பதை மட் டுமே குறிக்கோளாகக் கொண்டால் அதை  யாரும் ஏற்க முடியாது. அதற்காக போராட்ட மும் நடத்தினால் அது நியாயமானதல்ல.  இப்பிரச்சனையில் சமூகப் பொறுப் புணர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கணக்கில் கொண்டு சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுதவற்கு கல் குவாரி உரி மையாளர்கள் முன்வர வேண்டும். இதுவே  சரியானதாக இருக்க முடியும். விதி மீறல் களை விதிகளாக்க முயல்வது நியாய மல்ல.

(ந.நி.)