தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக அழைப்பு
கோவை, நவ.9- தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொரு ளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் நடப்பு 2022-23ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவ ராக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவருக்கு 26.08.2022-ன்படி மானியத் தொகை ரூ.90 ஆயிரம் விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர், பழங் குடியின இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 18-65 வயத்திற்குள்ளாக இருக்க வேண்டும். இவர்களுக்கு GST / Pan Card / முகவரி சான்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது. தாட்கோவின் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப் படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த விண்ணப்பதாரர், தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் TANCEM நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகையை TANCEM நிறுவ னத்திற்கு செலுத்தப்படும். கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய ஆதிதிராவிடர் தனிநபர்களுக்கான திட்டத் தொகையில் 30 விழுக்காடு (அல்லது) அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியம் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத் தொகையில் 50 விழுக்காடு (அல்லது) அதிக பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும். சிமெண்ட் விற்பனை தொடர்பான விளம்பரம் செய்வதற்கு தேவையான சிற்றேடு, பிரசுரங்கள் மற்றும் பெயர்ப்பலகை ஆகியவை TANCEM நிறுவனம் மூலம் வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு சிமெண்ட் விற்பனை செய்வதற்கான வழிமுறைகள், வியா பார உத்திகள், கொள்முதல் செய்வோரை அணுகும்முறை சம்பந்தப்பட்ட பயிற்சிகள் TANCEM நிறுவனம் மூலம் வழங்கப்படும். நேரடியாக களத்திற்கு அழைத்து சென்று பார்வையிடவும் TANCEM நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப் படும். எனவே, சிமெண்ட் விற்பனை முகவராக ஆதிதிரா விடர் மக்கள் www.application.tahdco.com என்ற இணைய தளத்திலும், பழங்குடியின மக்கள் www.fasttahdco.com என்ற இணையதளத்திலும் பதிவுகள் செய்து பயனடைய லாம் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள் ளார்.
டாம்கோ மூலம் கடன்
ஈரோடு, நவ. 9- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டு கழகம் மூலமாக கைத்தறி மற்றும் கைவினை கலை ஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கைவினைப் பணிகளில் ஈடுப் பட்டுள்ள ஏழை சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக் கழகம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டு கழகம் மூலமாக கைத்தறி மற்றும் கைவினை கலை ஞர்கள் மூலப்பொருட்கள், கருவிகள் ரூபவ் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக VIRASAT என்ற பெயரில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனுதவி திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப் படுகிறது. ரேசன் கார்டு, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, புகைப்படம் மற்றும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூபவ் நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயி லாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபர் கைது
கோவை, நவ. 9- கோவை, கண்ணப்ப நகரை சேர்ந்தவர் வல்லரசு என்கிற கூலி தொழிலாளி. இவர் ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் சாலையில் நடந்து செல்கையில், அங்கு வந்த 2 பேர் அவரை வழி மறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 600யை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வல்லரசு ரத்தினபுரி போலீ சில் புகார் அளித்தார். விசார ணையில் பணத்தை பறித்த ரத் தினபுரியை சேர்ந்த மாணிக் கத்தை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே வழிப் பறி, கொலை மிரட்டல் உள் ளிட்ட பல வழக்குகள் நிலு வையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு
அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
தாராபுரம், நவ. 9- தாராபுரம் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் 16 பேர் குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள் ளனர். தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலை பெரியார் சிலை எதிரே டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு தயாராகும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். எந்தவித கட்டணமின்றி ஏழை,எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கிவிடும் நோக்கத்தோடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் போட்டி தேர்வுகளுக்கு தயா ராகும் மாணவர்களுக்கு துறை சார்ந்த ஆசிரியர்கள் பயிற்சியளித்து வரு கின்றனர். இந்நிலையில் குரூப் 2 போட்டித் தேர்விற்காக 27 பேர் பயின்று முதல் நிலை தேர்வு எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், இந்த மையத்தில் பயின்ற ராஜேஷ், கவிதா, பிரியா, சுந்தர், மதன்குமார், மதிவாணன், மணிகண்டன், கார்த்திக், ஜாபர், கணேசமூர்த்தி, லட்சுமணன், திவ்யா, யமுனாராணி, அசோக்குமார், இஸ்மாயில், ராஜ்குமார் ஆகிய 16 பேர் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர் களுக்கு கல்வி மைய நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்ற தேர்வுகளிலும் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற அழைப்பு
ஈரோடு, நவ. 9- ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப் பட்ட மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அலுவ லக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இதில் அரசு , அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவி யருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை அவரவர் பயிலும் கல்வி நிறுவ னங்களிலேயே பெறலாம். புதுப்பித்தல் இனங்கள் 10.11.2022க்குள்ளும், புதிய இனங்களுக்கு 15.12.2022 க் குள்ளும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்று களுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் 10.11.2022 ஆம் தேதியில் துவங்கும் கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 6.12.2022 ஆம் தேதிக்கு முன்பும், 15.12.2022-ம் தேதியில் துவங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை 20.01.2023 ஆம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் கோப்புகளை சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
நூதன முறையில் மோசடி
சேலம், நவ.9- சேலத்தில் நண்பரை நூதன முறையில் ஏமாற்றிய இளை ஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் பிரவுசிங் சென்டர் வைத்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ரூ.20 ஆயிரம் தரும்படி நாகராஜனிடம் கேட் டுள்ளார். இதையடுத்து, நாகராஜன் பணத்தை அனுப்பி வைத்தார். இதனிடையே மீண்டும் அந்த பணத்தை பேடிஎம் மூலமாக அனுப்பி வைத்துவிட்டதாக நாகராஜனுக்கு அவரின் நண்பர் ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வங்கி கணக்கை சரிபார்த்தபோது அதில் பணம் வராமல் இருந்தது. இதுகுறித்து நண்பரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டை நாகராஜன் பார்த்தபோது அது போலியாக தயா ரித்து அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து செவ்வாயன்று சைபர் கிரைம் போலீசில் நாகராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
போலீசாருக்கு பாராட்டு
கோவை, நவ. 9 - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர், 8 காவல் ஆய்வாளர்கள், 23 உதவி ஆய்வாளர்கள், 7 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 44 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாராட்டு சான் றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
உதகை, நவ.9- உதகை நகராட்சி மார்க் கெட்டில் ரூ.10 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படு கிறது. இங்கு அறுவடை செய்யப் படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக் காக அனுப்பி வைக்கப்பட்டு வரு கிறது. உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறு வடை செய்த பின்னர் சிறு, குறு விவ சாயிகள் உதகை நகராட்சி மார்க் கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரு கின்றனர். அங்கு மொத்த வியா பாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங் களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட உதகை நகராட்சி சந்தை இந்தியாவின் முன் னோடி மாதிரி சந்தையாக கருதப் படுகிறது. இங்கு 1500 நிரந்தர வியா பாரக் கடைகளும் மற்றும் 500 தற் காலிக வியாபாரக் கடைகளும் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக் கையாளர்கள் வந்து செல்கின் றனர். மேலும், வாரயிறுதி நாட் களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகின்ற னர். கோடைக்கால சுற்றுலா கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு மேல் வந்து செல் வார்கள். வாடிக்கையாளர்களின் வசதியாக இங்கு 15 நுழைவா யில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன்பு இந்த மார்க் கெட்டில் 10க்கும் மேற்பட்ட கடை களை உடைத்து தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. மேலும், காவலாளி ஒருவர் மட்டும் பணியில் இருந்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது. திருட்டு சம்பவம் காரண மாக வியாபாரிகள் அச்சம் அடைந் திருந்தனர். மேலும், காய்கறி விற்ற பணத்தை கடைகளில் வைக் காமல் வீடுகளுக்கு எடுத்துச் சென் றனர். இதனால் இங்கு கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் கூறுகையில், இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டி டம் என்பதால் சில இடங்கள் சேத மாக இருந்தது. இதனால் ரூ.29 கோடி செலவில் 190 கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் மற்றும் வாகன நிறுத்தம் கட்டப் பட உள்ளது. இதேபோல் பாது காப்பு வசதி கருதி உதகை மார்க் கெட்டில் ரூ.10 லட்சம் செலவில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும், என்றார்.
திருப்பூரில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருப்பூர், அக். 9 - திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்வதால் கீழ்கண்ட9 வார்டுகளில் வியாழக் கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில், தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் இரண்டா வது குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள் ளனர். எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1க்குட்பட்ட வார்டு 1, 13, 14, மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 50, 51 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52,55 ஆகிய பகுதிகளில் 10ஆம் தேதி வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
மருத்துவப்படிப்பில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
திருப்பூர், நவ. 9- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த 29 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் வினீத் பாராட்டினார். திருப்பூர் மாவட்டத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 29 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரி களில் சேர்ந்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். இவ்விழாவில் திருப்பூர் ஜெய்வா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7 மாணவிகள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவ-மாணவிகள், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவிகள், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 2 மாணவ-மாணவிகள், அய்யங்காளிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ - மாணவிகள், கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கள் 2 பேர், பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 மாணவிகள், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவி, பொல்லிக் காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவ ரும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாண வரும், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவ ரும், எலையமுத்தூர் எஸ்.என்.வி. அரசு மேல்நிலைப் பள்ளி யில் ஒரு மாணவரும் என மொத்தம் 14 அரசு பள்ளிகளில் படித்த 29 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் மாணவ - மாணவிகளுக்கு இதய துடிப்புமானி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி (உடுமலை), முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட் டவர்கள் கலந்து கொண்டனர்.
மின்தடை
தாராபுரம், நவ. 9- தாராபுரம் பகுதியில் இன்று மின்தடை செய்யப் படவுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லடம் மின் பகிர் மான வட்டம், தாராபுரம் கோட்டம், தாராபுரம் 110-22 கேவி துணை மின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக (இன்று) வியாக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பகுதி களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
தாராபுரம் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
தாராபுரம், நவ. 9- தாராபுரம் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் 16 பேர் குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலை பெரியார் சிலை எதிரே டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு தயாராகும் 50க்கும் மேற்பட்ட மாணவர் கள் பயின்று வருகின்றனர். எந்தவித கட்டணமின்றி ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கிவிடும் நோக்கத் தோடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர் களுக்கு துறை சார்ந்த ஆசிரியர்கள் பயிற்சியளித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2 போட்டித் தேர்விற்காக 27 பேர் பயின்று முதல்நிலை தேர்வு எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், இந்த மையத்தில் பயின்ற ராஜேஷ், கவிதா, பிரியா, சுந்தர், மதன்குமார், மதிவாணன், மணிகண்டன், கார்த்திக், ஜாபர், கணேசமூர்த்தி, லட்சுமணன், திவ்யா, யமுனாராணி, அசோக்குமார், இஸ்மாயில், ராஜ்குமார் ஆகிய 16 பேர் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று ள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி மைய நிர்வாகி கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்ற தேர்வுகளிலும் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல வாழ்த்து தெரிவித்தனர்.
வாவிபாளையம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பேருந்து வசதி
மாநகராட்சி துணை மேயர் கோரிக்கை
திருப்பூர், நவ. 9- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாவிபாளையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரும்படி மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் அரசு போக்குவரத்துக் கழக வணிக மேலாளருக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 5ஆவது வார்டு வாவிபாளையம் அருகில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அமைக்கப் பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 1200க்கும் மேற்பட்ட வீடுகளும், அதில் 5000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வரு கின்றனர். இப்பகுதிக்கு போதிய போக்குவரத்து வசதி யின்றி அங்கு வசிக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் பயணம் செய்வதற்கு பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர். எனவே வாவிபாளையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்திக் கொடுத் து, அங்கு பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாவிபாளையம் வரை வந்து செல்லும் 11 சி, 46, 55, 11 மற்றும் கணக்கம்பாளையம் வரை வந்து செல்லும் 43 ஆகிய பேருந்துகளை அடுக்குமாடி குடியிருப்பு வரை வந்து செல்லும் வகையில் போக்குவரத்து துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டிருக்கி றார்.
தப்பியோடிய பிடிவாரண்ட் குற்றவாளி கைது
உதகை, நவ.9- உதகை அரசு மருத்துவமனையில் மருத் துவ பரிசோதனைக்கு வந்த போது போலீ சாரை தள்ளிவிட்டு தப்பிய பிடிவாரண்ட் குற்ற வாளி மீண்டும் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த காந் தல் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்ற ஜீவா (30). இவர் மீது மது குடித்துவிட்டு தகராறு செய்தல், திருட்டு, போதைப்பொருட் கள் பயன்பாடு உட்பட வழக்குகள் உதகை மத்திய, மேற்கு மற்றும் கேத்தி ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக ஜீவா நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜ ராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவ ருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஜீவாவை போலீசார் கடந்த அக்.31 ஆம் தேதியன்று மடக்கிப் பிடித்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்த முடிவு செய்தனர். அப்போது, ஜீவா தனக்கு வயிறு வலிப்பதாகவும், இரும்பு பொருளை வழுங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச் சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவமனையில் நோயா ளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் வருகை காரணமாக கூட்டம் அதிகமாக இருந் தது. இதனை பயன்படுத்திக்கொண்டு மருத் துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு போலீசாரை திடீரென தள்ளிவிட்டு, ஜீவா தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில், செவ்வா யன்று இரவு காந்தல் பகுதியில் ஜீவா பதுங்கி யிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதன்பேரில் காவல் ஆய்வாளர் மணி குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவை கைது செய்த னர். இதன்பின், உதகை நீதிமன்றத்தில் முன்நிறுத்தி, அவரை சிறையில் அடைத்த னர். இதற்கிடையே ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜீவாவின் நண் பர்களான லோகேஷ், எட்வின் லாரன்ஸ் ஆகி யோரும் கைது செய்யப்பட்டனர்.
யானை தாக்கி தொழிலாளி பலி
ஈரோடு, நவ.9- சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதி காடகநல்லி கிராமத் தைச் சேர்ந்தவர் சித்து (55). விவசாய கூலித் தொழி லாளி. இந்நிலையில் சித்து அருகே உள்ள வனப்பகுதிக் குள் செவ்வாயன்று விறகு சேகரிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென் றனர். அப்போது சித்து ரத்த காயங்களுடன் இறந்து கிடந் தார். அருகே யானை நடமா டிய கால்தடம் பதிவாகியிருந் தது. இதையடுத்து கடம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து, யானை தாக்கி சித்து உயிரிழந்த்தை உறுதி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.