districts

img

சுய தொழில் பயிற்சி பெற பழங்குடியினருக்கு அழைப்பு

பொள்ளாச்சி, மே 17- பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட நாகரூத்து 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற பழங்குடியின மக்களுக்கு சுயதொழில் பயிற்சி பெற வனத்துறை சார்பில் உறுப்பி னர்கள் சேர்க்கை நடைபெற்றது. கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாக ரூத்து 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் வசிக் கின்ற பழங்குடியின பெண்களுக்கு வனத் துறை சார்பில் சுய தொழில் பயிற்சி உறுப் பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் நெசவு முறையில் சேலைகள் மற்றும் துண்டுகள், வேட்டிகள், கைவினைப் பொருள் உள்ளிட்ட  சுய தொழில் செய்யும் பயிற்சியில் சேர உறுப் பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் மா.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுச்சி உற்பத்தியாளர் நிறு வனத்தின் உரிமையாளர் மணி சின்னசாமி, சுயதொழில் குறித்து உரையாற்றினார்.இதில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்ட னர்.