திருப்பூர், அக். 3- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னோடி தோழர்களில் ஒருவரான கல்கத்தா ஆர். பெரியசா மியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் கருவம்பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலு வலகம் முன்பாக கல்கத்தா பெரிய சாமியின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராஜகோபால், மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால், மாநகரக் குழு உறுப்பினர் பா.ஞானசே கரன் உள்பட கட்சி அணியினர் திரளான ஒரு பங்கேற்று நினை வஞ்சலி செலுத்தினர்.