districts

img

சிபிஎம் இண்டூர் பகுதிச் செயலாளராக சி.சேகர் தேர்வு

தருமபுரி, அக்.27- மார்க்சிஸ்ட் கட்சியின் இண் டூர் பகுதிச் செயலாளராக சி.சே கர் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் இண்டூர் பகுதிக்குழு 3  ஆவது மாநாடு, குப்புசெட்டிப் பட்டியில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. பகு திக்குழு உறுப்பினர் கே.தேவராஜ் செங் கொடியை ஏற்றி வைத்தார். பகுதிக்குழு உறுப்பினர் எம்.கண்ணியப்பன் அஞ்சலி  தீர்மானத்தை வாசித்தார். பகுதிக்குழு உறுப் பினர் என்.சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச் சுணன் துவக்கவுரையாற்றினார். பகுதிக் குழு செயலாளர் எம்.ராஜா அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.சின்னசாமி, ஆர்.மல்லிகா  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், இண்டூரை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் உருவாக்க வேண் டும். இண்டூரில் செயல்படுகிற  ஆரம்ப சுகாதார நிலையத்தை  வட்டார மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண் டும். நல்லம்பள்ளியிலிருந்து இண்டூருக்கு கூடுதல் பேருந்து  இயக்க வேண்டும். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திலிருந்து  காட்டுப்பன்றிக்கு விலக்கு அளிக்க வேண்டும். கோவில் மானிய நிலங்களில் குடியிருப்போர் மற்றும் சாகுபடி செய்வோருக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் இண்டூர் பகு திக்குழு செயலாளராக சி.சேகர் மற்றும்  9 பகுதிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் கே.என். மல்லையன் நிறைவுரையாற்றினார். பகுதிக் குழு உறுப்பினர் ஆர்.முருகேசன் நன்றி கூறி னார்.