districts

img

சிபிஎம் சத்தியமங்கலம் மலைக்கமிட்டி செயலாளராக சி.சின்னசாமி தேர்வு

ஈரோடு, நவ.15- மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலம் மலைக்கமிட்டியின் செய லாளராக சி.சின்னசாமி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தி மலை வட்டார 5 ஆவது மாநாடு கடம்பூரில், தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு திட லில், பசவராஜ், ராஜேந்திரன், ராஜாமணி ஆகியோர் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை மலைக் கமிட்டி உறுப்பினர் ஜெ.காளான் ஏற்றி வைத்தார். பி.தங்கவேல் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி தொடக்கவுரையாற்றினார். செயலாளர் சி. துரைசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இம்மாநாட்டில், சத்தியமங்கலம் மலை யில் வசிக்கும் மக்களுக்கு மலையாளி சாதிச் சான்று வழங்க வேண்டும். உகினியம், நக லூர் பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி  சென்று வர காலை, மாலை  பேருந்து வசதி செய்து தர வேண்டும். வனத்துறை அதிகா ரிகள் ஆடு, மாடு பெயரால் லஞ் சம் வாங்குவதைத் தடுத்திட  வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடம்பூரில் அமைக்க வேண்டும். மாணவ, மாணவியர் விடுதிகளை கடம் பூரில் அமைக்க வேண்டும். கெம்பநாய்க்கன் பாளையம் முதம் கடம்பூர் சாலையை இரு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இதனைத்தொடர்ந்து 15 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. அதன் செயலாளராக சி.சின்னசாமி தேர்ந்தெடுக் கப்பட்டார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன் நிறைவுரையாற்றினார். முடிவில், மலைக்கமிட்டி உறுப்பினர் பி.சிவராஜ் நன்றி  கூறினார்.