districts

img

கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள், சீருடைகள் வழங்கல்

கோவை, ஜன.12- கோவையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்த மான கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புதனன்று வழங்கினார் தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய  அறநிலையத்துறையில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரி யார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கோவில் பணி யாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்று அறிவித்தி ருந்தது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் புதனன்று  அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் பூசாரிகள் மற்றும் பணி யாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப் பட்டன. கோவை மாவட்டத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரி யார்கள் மற்றும் பூசாரிகள் என மொத்தம் 429 நபர்களுக்கு புத்தாடைகளும், கோவில்களில் பணிபுரியும் பணியாளர் களில் 352 ஆண்களுக்கும், 110 பெண்களுக்கும் சீருடை களும் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் மொத்த மாக 1091 பேருக்கு ரூ.23 லட்சத்து 2 ஆயிரத்து 450 மதிப்பீட் டில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்நிகழ்ச்சியில்  மருதமலை, பேரூர் கோவில் துணை ஆணையர் விமலா, ஈச்சனாரி கோவில் உதவி ஆணையர் ஆனந்தன், இந்து சமய அறநிலையத் துறை (கோவை) உதவி ஆணையர் விஜயலட்சுமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.