வணிகர் சங்க மாநாடு: கடைகள் அடைப்பு
வணிகர் சங்க மாநாடு: கடைகள் அடைப்பு தருமபுரி, மே 5- வணிகர் சங்கத்தின் மாநாட்டை முன்னிட்டு, தருமபுரி யில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41 ஆவது வணிகர் தின மாநில மாநாடு ஞாயிறன்று மதுரையில் நடை பெற்றது. இதன் காரணமாக அனைத்து கடை உரிமையா ளர்களும் ஒரு நாள் முழு கடையடைப்பு செய்து மாநில மாநாட் டில் பங்கேற்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள் ளிட்டு பல்வேறு பகுதிகளில் மளிகைக்கடை, நகைக்கடை, ஜவுளிக்கடைகளின் உரிமையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தங்களின் கடைகளை அடைத்துள்ளனர். கடை அடைப்பால் கடைவீதி, பஜார் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மே 10-இல் நாய்கள் கண்காட்சி துவக்கம்
மே 10-இல் நாய்கள் கண்காட்சி துவக்கம் உதகை, மே 5- உதகையில் நாய்கள் கண்காட்சி வருகின்ற 10 ஆம் தேதி யன்று தொடங்கவுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் பிரசித்த பெற்ற நாய்கள் கண்காட்சி. தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோ றும் கோடை சீசனின் போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத் தில் நாய்கள் கண்காட்சியானது மே 10 ஆம் தேதியன்று தொடங்கி 12 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள் ளது. இதில் 52 ரகங்களில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற் கின்றன. இது குறித்து தென்னிந்திய கெனல் கிளப் தலைவர் ரஜினி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சவுத் இந்தியன் கெனல் கிளப் சார்பில், 134 மற்றும் 135 ஆவது நாய் கண்காட்சியா னது உதகையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத் தில் மே 10 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நிகழ்வாக நாய்களின் கீழ் படிதல் போட்டியு டன் கண்காட்சி நடத்தப்படும். இப்போட்டிகளை சிங்கப்பூரை சேர்ந்த நடுவர் பேட்ரிக் வாங் மதிப்பிடுவார். இந்தாண்டு இந் தியா முழுவதிலிருந்து 52 வகை நாய்கள் 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன. இதில், நாட்டு ரக நாய்களான ராஜ பாளையம், சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட ரக நாய்க ளும் பங்கேற்கின்றன. இப்போட்டியின் நடுவர்களாக பிலிப் பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாரியோ மகசாசே, தைவா னைச் சேர்ந்த அலெக்ஸி, சிங்கப்பூரைச் சேர்ந்த சின் மின் காக் பணியாற்றுகின்றனர். இறுதி நாளில், போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றிற்கு ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருதும் வழங் கப்படும், என்றார்.
கோவை : 13 மையங்களில் 6,967 பேர் நீட் தேர்வு எழுதினர்
கோவை, மே 5- கோவையில் 13 மையங்களில் 371 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட் பட 6,967 பேர் நீட் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் இளநிலை மருத்து வப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவுத்தேர்வின் அடிப் படையில் நடத்தப்படுகிறது. இந்நிலை யில் நாடு முழுவதும் நீட் நுழை வுத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த நீட் தேர்வை எழுத 13 மையங் கள் அமைக்கப்பட்டன. கோவையில் 371 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 6,967 பேர் தேர்வு எழுதினர். இந்த நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை (மூன்று மணி 20 நிமிடம்) வரை நடைபெற்றது. ஆனால், மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வருகை தர வேண்டும். கடைசி நேரம் பதட்டங்களை தவிர்க்க மாணவர்கள் முன்கூட்டியே வீடுகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு புறப்பட வேண் டும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடை பெற்றது. இத்தேர்வில் வழக்கம் போல் கடுமையான கேள்விகள், பரி சோதனைகள் கடைபிடிக்கப்பட்டிருந் தன. தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் ஞாயி றன்று 8 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் மொத் தம் 5 ஆயிரத்து 758 பேர் நீட் தேர்வு எழு தினர். மாணவ, மாணவிகள் காலை 11 மணி முதல் நீட் தேர்வு மையங்களில் குவிய தொடங்கினர். இதனையடுத்து மாணவ, மாணவியரை கடும் சோத னைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட் டனர்.
இ - பாஸ் முறையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை: நீலகிரி ஆட்சியர்
இ - பாஸ் முறையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை: நீலகிரி ஆட்சியர் உதகை, மே 5- நீலகிரி மாவட்டத்துக்கு இ - பாஸ் முறையில் வர எவ் வித கட்டுப்பாடுகளும் இல்லை. வாகனங்களை பதிவு செய்துவிட்டு வழக்கம் போல் வரலாம் என மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரு கின்றனர். இங்கு வெளிநாடுகள் மற்றம் வெளி மாநி லங்களிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை விடுமுறையின் போது லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். உதகைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக் கையும் அதிகரிப்பதால், அனைத்து பகுதிகளிலும் போக் குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இரு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ - பாஸ் பெற வேண் டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இ - பாஸ் முறை மே 7 ஆம் தேதியன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், இ - பாஸ் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு எத் தனை வாகனங்கள் வேண்டுமானாலும் வரலாம். பதிவு மட்டும் செய்தால் போதும் என நீலகிரி மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனியன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு மே 7 ஆம் தேதி யன்று முதல் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு இ - பாஸ் பெற வேண்டும். தற்போது இதற்கான வழிகாட்டு நெறி முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வரும் வாகனங்கள் குறித்த முழு விவரங்களையும் பதி வேற்றம் செய்ய வேண்டும். மேலும், தாங்கள் வரும் வாக னங்களில் எத்தனை பேர் வருகிறோம், எத்தனை நாட் கள் உதகையில் தங்குகிறோம் என்பதை தெளிவாக பதி வேற்றம் செய்யப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இ - மெயில் மூலமாகவும், தமிழ் நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்களது செல்போன் எண்கள் மூலம் இந்த இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யலாம். முழு விவரங்க ளையும் பதிவு செய்த பின் அவர்களுக்கான இ – பாஸ் கிடைத்துவிடும். மாநில எல்லை மற்றும் மாவட்ட எல்லை களில் வந்தவுடன் அங்கு சோதனைச்சாவடிகளில் உள்ள வர்கள் அந்த இ - பாஸை சோதனை இடுவார்கள். அப் போது அதில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து சுற்றுலாப் பயணிகளை நீலகிரி எல்லைக்குள் வர அனு மதிக்கப்படுவார்கள். நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்துள்ள சுற்றுலா நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் வழக்கம்போல் வந்து செல்லலாம். அதேசமயம், மற்ற மாவட்டங்களின் பதிவு எண் கொண்ட வாகனங்களை நீல கிரி மாவட்டத்தில் வைத்துள்ள சுற்றுலா நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவ லகம் மூலமாக ஒரு இ - பாஸ் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி அவர்கள் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநி லங்களுக்கு சென்று வரலாம். மேலும் சுற்றுலாப் பயணி கள் தற்போது வந்து செல்ல எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அவர்கள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் மட்டும் செய்யப்பட வேண்டும். பதிவு செய்த பின்னர் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் வந்து செல்ல லாம். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் போல் வந்து செல்ல லாம். அரசு பேருந்துகளில் எத்தனை பேர் வருகிறார்கள் என்பது குறித்து போக்குவரத்து கழகம் மூலம் தக வல்கள் பெறப்படும். இந்த இ - பாஸ் பரிசோதிக்கும் பணி யில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் ஈடு படுவார்கள். மேலும், epass.tnega.org என்ற இணைய தளம் மூலம் இ - பாஸ் பெறலாம், என்றார்.
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி
திருப்பூர், மே 5- திருப்பூரில் நடைபெற்ற புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தியாவில் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருகி றது. இதனை தடுக்கவும், புற்றுநோய் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு அமைப்பினர் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதன்ஒருபகுதியாக திருப்பூரில் பல்வேறு தனியார் அறக்கட்டளை மற்றும் அமைப்புகள் சார்பில், புற்று நோயை தடுக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, திருப்பூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் தொடங்கி வைத் தார். இப்பேரணி பல்வேறு சாலைகள் வழியாக நஞ்சப்பா பள்ளி வந்தடைந்தது. இதையடுத்து நஞ்சப்பா பள்ளியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பலரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன்பின் சைக்கிள் பேரணி அங்கிருந்து புறப்பட்டு அவிநாசியில் நிறைவடைந்தது.
அவதூறு கருத்து: மங்களம் ஊராட்சி கண்டனம்
நாமக்கல், மே 5- மங்களம் ஊராட்சி நிர்வாகம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அவதூறு கருத்துக்கு ஊராட்சி மன்றத் தலை வர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம், மல்லசமுத்தி ரம் ஊராட்சி ஒன்றியம், மங்களம் கிராமமே குடிநீர் பற்றாக்குறையால் அழியும் நிலை யில் இருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டு வரு கிறது. இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் குப்பாயி வெளியிட்டுள்ள அறிக்கை யில், மங்களம் ஊராட்சியின் பெயரை கெடுக் கும் வகையில், சில நபர்கள் இத்தகைய தவ றான செய்திகளை பரப்பி வருகின்றனர். மங்களம் ஊராட்சியில் 13 குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் அடிப் படை வசதிகளான கழிவுநீர் வடிகால், தெரு விளக்கு மற்றும் குடிநீர் வசதி உள்ளன. தின மும் மோட்டார் மூலமாக மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டி நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. தவ றான தகவல்களை வாட்ஸ் அப்பில் ஒரு சிலர் பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
கொளுத்தும் வெயில்: சுற்றுலா வாகன தொழில் பாதிப்பு
நாமக்கல், மே 5- கடும் வெயில் காரணமாக மக்கள் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டாததால், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற் றுலா வாகன உரிமையாளர்கள் தெரி வித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் ஏராளமான சுற்றுலா வாகனம் வைத்தி ருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் உள்ளனர். ஐந்து பேர் செல்லக் கூடிய வாகனம் முதல் 50 பேர் வரை செல்லக்கூடிய அனைத்து விதமான சுற் றுலா வாகனங்களும் செயல்பட்டு வரு கிறது. சுற்றுலா வாகன தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள் ளன. தற்போது கோடை சீசன் காலம் என்பதால், வாடிக்கையாளர்கள் தங் களை அணுகுவார்கள் என எதிர் ர்பார்த்து காத்திருந்த சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து சுற்றுலா வாகனம் உரிமை யாளர்கள் கூறுகையில், பொதுவா கவே தீபாவளி போன்ற மிகப்பெரிய பண்டிகை நாட்களில் தொடர் விடுமுறை இருக்கும் என்பதால், பல்வேறு சுற்று லாத் தலங்களுக்கும் செல்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார் கள். அப்போது ஓரளவு வேலைவாய்ப்பு இருக்கக்கூடிய நாட்களாக இருக்கும். அதைவிட்டால் டிசம்பரில் ஐயப்பன் கோவில் சீசன், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தையொட்டி வெளியி டங்களுக்கு சுற்றுலா செல்ல பொது மக்கள் விரும்புவார்கள். எங்களுக்கும் அது முக்கியமான சீசன் காலம் என்ப தால் எங்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகளவு இருக்கும். ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்ற னர். ஏற்காடு, கொல்லிமலை, கொடைக் கானல், உதகை போன்ற பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்து வருவதால், சுற்றுலா செல்வோர் ஏமாற்றம் அடை கின்றனர். இதனால் பொதுமக்கள் ஆர் வம் காட்டாத நிலை ஏற்படுகிறது. எங்க ளுக்கு வாடகை கிடைக்காததால், எங் களை நம்பி உள்ள ஓட்டுநர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள் ளது. எப்போதும் ஏப்ரல் மாத துவத் கத்திலேயே எங்களை அணுகும் வாடிக் கையாளர்கள், மே மாதத்தில் சுற்றுலா செல்வதற்கான அட்வான்ஸ் தொகை அளிப்பார்கள்; விவரங்களை கேட்டறி வார்கள். ஆனால், தற்போது ஏப்ரல் முடிந்து மே மாதமே தொடங்கி விட்டது. இதுவரையிலும் கடந்தாண்டு வந்த வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் கூட இது வரையிலும் எங்களை நாடி வரவில்லை. முக்கிய சீசன் நாட்களில் கொளுத்தும் வெயில் காரணமாக போதிய வருவா யின்றி உள்ளோம். இன்னும் சில வாரங் களில் நிலைமை சரியாகும் என எதிர் பார்க்கிறோம், என்றனர்.
சூறைக்காற்றுக்கு பெண் பலி: 2 பேர் படுகாயம்
சூறைக்காற்றுக்கு பெண் பலி: 2 பேர் படுகாயம் தருமபுரி, மே 5- தருமபுரியில் வீசிய சூறைக்காற்றுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு பெண்கள் படுகாய மடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. மாவட்டத்தில் கடந்த மே 2 ஆம் தேதி 108.5 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், 3 ஆவது நாளாக சனியன்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய் தது. மின்சாரம் தடைபட்டு கிராமங்கள் இருளில் மூழ்கியது. பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, காரிமங்கலம் பகுதிகளில் சனி யன்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்றா யம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த முனியப்பன் மனைவி கோவிந்தம் மாள் (55), துளசி (65), மகேஸ்வரி (45) ஆகியோர், அருகே யுள்ள அன்பழகன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்ட கையில் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தனர். அப்போது, காற் றின் வேகத்துக்கு திடீரென கொட்டகையின் மேலிருந்த தக ரம் பறந்து வந்து, நின்று கொண்டிருந்த 3 பெண்கள் மீது விழுந்ததில் கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். படுகாயமடைந்த துளசி, மகேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், கொட்டகையில் மழைக்காக இருந்த 7 ஆடுகளும் இடிப்பாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து காரிமங்கலம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.