districts

img

தொழிலாளர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பேருந்து பணிமனை

திருப்பூர், அக். 21 - திருப்பூர் அரசுப் பேருந்து பணிம னையில் சிதிலமடைந்து இடிந்து  விழும் கட்டிடங்களில் தொழிலாளர்  உயிருக்குப் பாதுகாப்பு இல்லை  என்று சிஐடியு தொழிற்சங்கம் முறை யிட்டும், அரசுப் போக்குவரத்து நிர் வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.  தொழிற்சாலைகள் தலைமை ஆய் வாளருக்கு நேரில் புகார் தெரிவித் தும் அவர்களும் கண்டு கொள்ள வில்லை. கடந்த ஜூன் 3ஆம் தேதி திருப்பூர் கிளையில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்த காரணத்தால், சிஐ டியு சார்பில் திருப்பூர் மண்டல அலுவ லகத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் உள்ள கட்டிடங்களின்  சுற்றுச்சுவர்களைப் பராமரிக்க வேண்டும். பழுதான சுற்றுச்சுவர் களை உடனடியாக சரி செய்ய வேண் டும் என தொழிலாளர் துறைக்கும், நிர் வாகத்திற்கும் கடிதம் எழுதி இருக் கின்றனர். இந்த கடிதத்தின் அடிப்படையில் சில வேலைகளை மண்டல நிர்வா கம் செய்தது. ஆனால் உடனடியாக பராமரிக்க வேண்டிய திருப்பூர் கிளை பணிமனை வளாகத்தில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரை கவ னிக்காமல் மெத்தனமாக இருந்த னர். இதனால் கடந்த வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையில் கிணற் றுச் சுற்றுச்சுவர் சரிந்து கிணற்றுக் குள் விழுந்துவிட்டது. கிணற்றின் மேற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த இரு சக்கர வாகனங்கள் நல் வாய்ப்பாக சேதமின்றி தப்பின. சிஐடியு அனுப்பிய கடிதத்தின் மேல், தொழிலாளர் துறை தொழிற் சாலை ஆய்வாளர் உரிய முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு நடவ டிக்கை எடுத்திருந்தால், ஆய்வாளர் கள் நேரில் வந்து ஆய்வு செய்திருந் தால், இத்தகைய பாதிப்பைத் தவிர்த் திருக்க முடியும். தொழிற்சாலை ஆய் வாளர்கள் அரசுப் பேருந்து பணிம னையின் எந்த தொழிற்சாலைகளை யும் ஆய்வு செய்வதில்லை.  அரசு நிறுவனமான போக்குவ ரத்து கழகத்தில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்குவ தில்லை. தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க உரிய ஓய்வறைகளும், காற் றோட்ட வசதி உள்ள சுகாதாரமான  ஏற்பாடுகளும் இல்லை. வளாகங்க ளில் உள்ள உணவகங்களும் சுகாதா ரமற்றதாக உள்ளன. உணவகங்க ளில் தேவையான இருக்கைகளோ, மின் விசிறிகளோ இருப்பதில்லை. தொழிலாளர்கள் படும் இன்னல் களை எழுத்துப்பூர்வமாக புகார் கடி தம் தயாரித்து, சென்னைக்குச் சென்று தொழிற்சாலைகள் கூடுதல் தலைமை ஆய்வாளரிடம் நேரடியாக மனுக் கொடுத்தும்கூட, இந்த அவல நிலையைப் போக்காமல், மெத்தனமாக இருக்கின்றனர். தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாதவர்களாக அரசுப் போக்கு வரத்து நிர்வாகமும், தொழிற்சாலை  ஆய்வாளர் அலுவலகமும் இருப் பதை எண்ணி தொழிலாளர்கள் மனக் குமுறலுடன் உள்ளனர். தொழிலாளர்  துறையோ கும்பகர்ணத் தூக்கத்தில்  இருக்கிறது என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.