districts

img

கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது

திருப்பூர், ஆக.1- காளிவேலம்பட்டியில் இருந்து சாமிகவுண் டம்பாளையம் அரசுப்பள்ளிக்கு பேருந்து வசதி கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேற்கொண்ட தொடர் முயற்சி வெற்றி பெற்றது. அதன்படி திங்களன்று அர சுப்பேருந்து இயக்கப்பட்ட நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் அந்த பேருந்தில் பள்ளிக்குப் பயணம் செய்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், காளிவேலம்பட்டி  கிராமத்தில் இருந்து சாமி கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள் ளிக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த 70க்கும் மேற் பட்ட குழந்தைகள் ஆட்டோவிலும், வேனி லும் தினமும் சாமி கவுண்டம்பாளையம் பள் ளிக்குச் சென்று வந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள், தங் களது பிள்ளைகளின் போக்குவரத்துக்கு மட்டும் மாதம் ரூ.700 முதல் ரூ.800 வரை செலவு செய்ய வேண்டிய நெருக்கடி இருந் தது. எனவே இந்த பகுதியில் அரசு பேருந்து இயங்கினால் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்ற நிலை இருந்தது. இதைய றிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காளி வேலம்பட்டி கிளைகள் இணைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும் என திருப்பூர்  மாவட்ட ஆட்சியர், அரசு போக்குவரத்து கழ கத்தின் பல்லடம் மேலாளர்,  திருப்பூர் மண்டல மேலாளர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து  கோரிக்கை வைத்து வந்தனர். இக்கோரிக் கையை நிறைவேற்றுவதற்கு போராட்ட அறி விப்பும் செய்யப்பட்டது.

இதன் விளைவாக  பல்லடம் காவல்துறையினர் முன்னிலையில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அதிகா ரியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய் யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் 15 நாட்கள் இடைவெளியில் பேருந்து இயக்குவதாக போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். அந்த அடிப்படையில் திங்க ளன்று காலை  8:30 மணி அளவில் காளிவேலம் பட்டியில் இருந்து சாமி கவுண்டம்பாளையம் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து இயக்கப் பட்டது. முதல் நாள் காலையில் பேருந்தில் 76 பள்ளி குழந்தைகள் பயணம் செய்தனர். வாலி பர் சங்கத்தினர், ஊர் மக்கள் மகிழ்ச்சியோடு அவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பேருந்து இயக்க நடவ டிக்கை எடுத்த பல்லடம் அரசு போக்குவ ரத்து கழக கிளை மேலாளர், ஒத்துழைப்பு வழங்கிய பல்லடம் காவல்துறை அதிகாரி கள், இதற்கான போராட்டத்தில் துணை நின்ற காளிவேலம்பட்டி பொதுமக்கள் அனைவ ருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நன்றி தெரிவிப்பதாக சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் சி.முருகேஷ் கூறினார்.