திருப்பூர், மே 30- உடுமலை வட்டம் திருமூர்த்தி மலை – குருமலை பகுதிக்கு சாலை அமைத்து மலைவாழ் மக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சி யருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செ.முத்துக் கண்ணன் கடிதம் அனுப்பி உள் ளார். இக்கடிதத்தில் தெரிவித்துள்ள தாவது, திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை வனச்சரகத்திற் குட்பட்ட மலை கிராமங்களில் 3500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் அரை நூற்றாண் டிற்கு மேலாக சாலை வசதி கேட்டு பல முறை மனுக்கள் அளிக்கப் பட்டுள்ளது. போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாம்பு கடிபட்ட வர்கள், உடல்நிலை சரியில்லாத வர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர சாலை வசதிகள் இல் லாத காரணத்தால், மலையிடுக்கு களின் வழியே மூங்கில் குச்சிகளில் தொட்டில் கட்டி பாதிக்கப்பட்ட வர்களை 6 முதல் 40 கி.மீ. தூரம் வரை கடந்துதான் உடுமலை சம வெளிக்கு வந்தடைய வேண்டிய நிலை உள்ளது. இதன்பின் வாக னம் மூலம் மருத்துவமனைக்கு வருவதற்குள் எண்ணற்ற விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் கடந்த காலங்களில் பறிபோகியுள் ளன. இதற்கு காரணம் என்வென் றால், 110 கி.மீ. சுற்றி உடுமலை அரசு மருத்துவமனை வர வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பல முறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசு மாவடப்பு செட்டில்மென்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். ஆனால் அதுவும் இதுவரை கட்டப் படவில்லை.
திருமூர்த்திமலை முதல் குரு மலை வரை சாலை அமைத்தால் 6 கிமீ தூரத்தில் சென்றடைய முடியும். 110 கி.மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய அவசியம் ஏற் படாது. இதனால் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்தில் உடு மலை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வந்து சேர்த்து உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே, இனியும் உயிர் சேதம் ஏற்படாமல் மக்களை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். 2006 வன உரிமை சட்டப்படி சாலை அமைக்க முடியும். தற் போது வன உரிமை குழுவில் திரு மூர்த்திமலை முதல் குருமலை வரை சாலை அமைக்க கிராம சபையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தளி பேரூராட்சி கூட் டத்திலும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் இதற்கு பரிந் துரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை துரிதப்படுத்தி அனுமதி வழங்க வேண்டிய வனத்துறை பல காரணங்களை சொல்லி தாமதப் படுத்தி வருகிறது. எனவே, குடிமக்களின் நலன் கருதி வன உரிமை சட்டப்படி அவர்களுக்கு தேவையான சாலை வசதியை உடன் ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையெனில் சட்ட விதிகளை தளர்த்தி உதவிட வேண்டும் என அதில் வலியுறுத் தப்பட்டுள்ளது.