திருப்பூர், ஜூலை 6 – பிஎஸ்என்எல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை ஓய்வூதியர்களுக்கு நீண்ட காலம் நிலுவையில் உள்ள பென்சன் மாற்றம் கோரி திருப் பூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் மெயின் தொலை பேசி நிலையம் முன்பாக வியா ழனன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்துக்கு அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைதொடர்புத் துறை ஓய்வூதியர் சங்கத் தின் அவிநாசி கிளைச் செயலாளர் கே. கணேசன் தலைமை ஏற்றார். இதில் அகவி லைப்படி உயர்வு அடிப்படையில் பென்சன் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அகில இந்திய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இங்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பா.சௌந்தரபாண்டியன், திருப்பூர் கிளை உதவிச் செயலாளர் பழனிவேல்சாமி ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பிஎஸ்என்எல், தொலைத்தொடர்பு ஓய்வூ தியர்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.