திருப்பூர், ஜூலை 26 – பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் பல்லடம் கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. பல்லடம் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலைய வளாகத் தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஸ்டெல்லா அண்ணி சுதாகர் சங்க கொடி ஏற்றினார். மாவட்டச் செயலாளர் குடியரசு சிறப் புரை ஆற்றினார். இம்மாநாட்டில் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு 4ஜி, 5ஜி சேவையை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கிளைத் தலைவர் என்.பாலசுப்பிரமணியம், செயலாளர் எம்.முருக சாமி, பொருளாளர் ஏ.ஜெயராஜ் ஆகியோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் பங்கேற்றனர். முடிவில் என்.பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.