கோவை, அக்.15- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவையை வழங்க வேண் டும் என அகில இந்திய பிஎஸ் என்எல் - டாட் ஓய்வூதியர் சங்க (AIBDPA) கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல் - டாட் ஓய்வூதியர் சங்கத்தின் கோவை மாவட்ட 7 ஆவது மாநாடு செவ்வாயன்று (நல்லாயன் திரு மண மண்டபம்) தோழர் வாமனன் அரங்கத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சௌந்திரபாண்டியன் தலைமை வகித்தார். தேசிய கொடி யினை எம்.வெங்கட்ராஜுலு மற் றும் சங்க கொடியினை சாவித்திரி ஆகியோர் ஏற்றி வைத்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.குடியரசு வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஆர்.இராஜசேகர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். பிஎஸ்என்எல் கோவை முதன்மை பொது மேலாளர் வி.சங்கர், நிர்வாக அதிகாரி ஆர்.பால்வண் ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மகேஸ்வரன், வெங்கட்ராமன். பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அப் துல் முத்தலிப் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ் இணையக்கல்விக் கழக மதியுரைஞர், பாரதிதாசன் விருதாளர் புலவர் செந்தலை ந.கவு தமன் சிறப்புரையாற்றினார். இதில், அனைத்து ஓய்வூதியர் கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கெளரவமான வாழ்க்கையை உத் தரவாதப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். பிஎஸ் என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவையை வழங்க வேண்டும். தனியாரின் கொள்கைக்கு ஓய்வூ திய நிதியைத் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலை வராக பி.சௌந்திரபாண்டியன், செயலாளராக ஏ.குடியரசு, பொரு ளாளராக என்.பி.இராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஏ.பாபுராதாகி ருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.