திருப்பூர், ஆக.1- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5 ஜி சேவை வழங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்க இணைந்த கிளைகள் 11 ஆவது மாநாடு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையத்தில் வியாழனன்று இம்மா நாடு நடைபெற்றது. கிளைத்தலை வர்கள் கே.ராதாகிருஷ்ணன், என்.குமர வேல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கிளைச் செயலாளர் ஜெ.அருண்குமார் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் எம்.அண்ணா துரை சங்க கொடியை ஏற்றினார். கிளை உதவித் தலைவர் ஜெ.நிர்மலா ராணி தேசிய கொடியை ஏற்றினார். கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.ம கேஸ்வரன் மாநாட்டைத் துவக்கி வைத் துப் பேசினார். இதைதொடர்ந்து, பிஸ் என்எல் தொலைதொடர்பை மேம்படுத் துவது குறித்து சேவை மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல் உதவி பொது மேலா ளர் சஜி ஜோசப், வட்டாரப் பொறி யாளர் எம்.வீரக்குமார், உதவி தொலை தொடர்புஅலுவலர் வி.குரு சாமி, சங்கத்தின்மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெ.அருண்குமார், மாநில கவுன்சில் உறுப்பினர் பொலிசெட்டி ரமேஷ் ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து, பணி ஓய்வு பெற் றோர் மற்றும் வருமான வரி பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் பி.கல்யா ணராமன், மாநில அமைப்பு செயலா ளர்எம்.அண்ணாதுரை, மாநில உத வித்தலைவர் சி.சசிகுமாரன், ஓய்வுபெற் றோர் சங்கக் கிளைச் செயலாளர் கே.விஸ்வநாதன், தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைச் செயலாளர் சி.துரைசாமி, இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க சஞ்சய் ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பிஎஸ்என்எல் மெயின் மற்றும் விரி வாக்க கிளைகளின் ஊழியர்கள் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் தேர்வு: மெயின் கிளைத் தலைவராக எம். அண்ணாதுரை, செயலாளர் ஜெ. அருண்குமார், பொருலாளர் எஸ். சிபின், விரிவாக்க கிளைத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், செயலாளர் சி. முருகானந்தம், பொருளாளர் பி.செந் தில் நாதன் ஆகியோர் புதிய நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர். முடி வில் ஜி.மல்லிகா நன்றி கூறினார்.