தருமபுரி, நவ.28- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனிதசங்கிலி இயக்கத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண் டும். 2017 ஆம் ஆண்டு ஜன.1 ஆம் தேதி முதல் ஊதிய மாற்றம் மற்றும் பென்சன் மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பிஎஸ்என்எல் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப் பின் சார்பில் செவ்வாயன்று மனிதசங்கிலி இயக்கம் நடைபெற்றது. தருமபுரி தொலை பேசி நிலையம் அருகே நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் கே.மணி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் உமாராணி, மாவட்டச் செயலா ளர் பி.கிருஷ்ணன், ஓய்வுபெற்றோர் அமைப் பின் மாவட்டச் செயலாளர் ஏ.டி.பாஸ்கரன், வனங்காமுடி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனிதசங்கலி இயக்கத் திற்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ஹரிஹரன் தலைமை வகித் தார். பிஎஸ்என்எல் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட் டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க செயலாளர் கோபால், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, ஒப் பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் செல்வம், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். கோவை கோவை, மேட்டுப்பாளையம் சாலையி லுள்ள பிஜிஎம் அலுவலகம் அருகே நடை பெற்ற மனிதசங்கிலி இயக்கத்திற்கு, பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கல்யாணராமன் தலைமை வகித்தார். என்எப் டிஇ மாவட்ட உதவிச்செயலாளர் பிரபாகர் வர வேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநி லத் தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், மாவட்ட உதவிச்செயலாளர் ஏ.எஸ்.ஷாகின் அஹமத், என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியம். பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பிர சன்னா, என்எப்டிஇ ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் ராபர்ட், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அப்துல் முத்தலிப் உட் பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். முடிவில், சசிகுமரன் நன்றி கூறினார். இதேபோன்று பொள்ளாச்சியில் நடை பெற்ற மனிதசங்கிலி இயக்கத்திற்கு, பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவித்தலை வர் வி.விஜேஷ்வரி தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.காசிநா தன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.