திருப்பூர், ஜூன் 1– பிஎஸ்என்எல் வாடிக்கை யாளர்களுக்கு 4ஜி, 5ஜி சேவை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிஎஸ் என்எல் ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. அலைவரிசை சேவையை உடனடியாக மேம்படுத்துவதுடன், ஊழியர்களின் ஊதிய மாற்றத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். பதவி உயர்வு கொள் கையை அமலாக்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி அனைவரும் கரம் கோர்த்து முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்துக்கு என்எப்டிஇ கிளைச் செயலாளர் அந்தோணி மரியபிரகாஷ் தலைமை ஏற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, திருப்பூர் கிளைச் செயலாளர் குமரவேல், ஓய்வூதியர் சங்க கோவை மாவட் டத் தலைவர் பா.சௌந்தரபாண்டியன் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், என்எப்டிஇ, ஒப்பந்த தொழிலாளர் சங்கம், ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்டவற் றின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். நிறைவாக ஓய்வூதியர் சங்க கிளைச் செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.