ஈரோடு, மார்ச் 2- இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழி யர்களின் சம்பள நிலுவைவை உடனடியாக வழங்க வேண் டும். பிஎஸ்எல்என் ஊழியர்களின் சம்பள மறுப்பு, பிஎப், இஎஸ்ஐ போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியா ருக்கு தாரைவார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, ஈரோடு டெலிபோன் பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.பழனிச்சாமி, ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் சி.பரமசிவம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பவானி தொலைபேசி நிலையம் முன்பு முத்துராமலிங்கம், பெருந்துறையில் எம்.சையத் இத்ரீஸ், எஸ்.கோபால், கோபியில் அய்யாசாமி உள்ளிட்டோர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பிஎஸ்என்எல் ஊழி யர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.