பொள்ளாச்சி, மே 29- ஊதிய உயர்வு வழங்கிடக்கோரி, அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டமைப் பின் சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடக் கோரி, பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவ லக வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கத் தின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப் புச் செயலாளர் எஸ்.மனோகரன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் என்எப்டிஇ பொறுப்பாளர் சப்தகிரி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணை அமைப்புச் செயலாளர் ஏ.நிசார் அக மது, மாவட்ட உதவி தலைவர் வி.விஜேஸ் வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில் என்.கோபாலன் நன்றி கூறினார்.