districts

img

சிறுவன் மீது கொடூர தாக்குதல்: இந்து முன்னணி பிரமுகர் கைது

பொள்ளாச்சி, நவ.28- பொள்ளாச்சியில் வட மாநில சிறுவனை கொடூர மாக தாக்கிய இந்து முன் னணி பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியில் உள்ள தர்ஷன் என்பவரது உண வகத்தில் பணம் திருடப்பட்டதாக கூறி அரு கில் உள்ள கரிக்கடையில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவனை இந்து முன்னணி பிரமு கர் கணேஷ் மற்றும் அவரது நண்பர் ஓம்பிர காஷ் ஆகியோர் அந்த சிறுவனின் கை கால் களை கட்டி பைப்பால் கொடூர மாக தாக்கி உள்ளனர். இந்த  வழக்கை விசாரித்த நெகமம்  காவல் துறை அதிகாரிகள்  உணவக உரிமையாளர் மற் றும் அவரது நண்பர் கணேஷ்  மற்றும் ஓம்பிரகாஷ் ஆகி யோர் மீதுகடத்தி கொலை  செய்ய முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.