சேலம், டிச.4- மூளைச்சாவு அடைந்த இளை ஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இறந்தபின்னும் தன் மகன் 8 பேருக்கு வாழ்க்கை கொடுத்தாக தந்தை நெகிழ்வோடு தெரிவித்தார். சேலம், மல்லூர் பகுதியை சேர்ந்த முருகன்,வேலாயி தம்பதி யர்களின் மகன் மணிகண்டன் (26). இவர் சேகோசார்வ் ஆலை யில் ஒப்பந்த பணியாளராக உள் ளார். இவரது தாயார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்த நிலையில் குடும் பத்தை மணிகண்டன் தான் வழி நடத்தி வந்துள்ளார். இந்த நிலை யில் கடந்த 30 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, லாரி மோதி படுகாயமடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத் தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சனியன்று இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் குடும் பத்தாரிடம் தெரிவித்தனர். அப் போது மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்கள் உடல் உறுப்புகளை தானம் வழங்கு வதற்கு ஒப்புதல் அளித்தனர். பிறகு மருத்துவர் மணிகண்டனின் உடல் உறுப்புகளை அறுவைசிகிச்சை மூலமாக எடுத்தனர்.
பின்னர் இருதயம், கண்கள், இருதயவாழ்வு, கல்லீரல், சிறு நீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்பு கள் எட்டு பேருக்கு வழங்குவதற்கு சேலம் அரசு மருத்துவமனை நிர் வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இது தொடர்பான தகவலையும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மணி கண்டனின் தந்தை மற்றும் உறவி னர்களிடம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு இருதயம் மற்றும் நுரையீரல், கோவைக்கு கல்லீரல், ஈரோடு மற்றும் சேலத் திற்கு சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ் வொரு உறுப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறை யினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மணிகண்டனின் சகோதரி உடல் உறுப்புகள் எடுத்துச்சென்ற பெட்டி யை பிடித்துக் கொண்டு கதறி அழுந்தது பார்ப்பவர்கள் கண் ணீரை வரவழைத்தது. இது குறித்து மணிகண்டனின் தந்தை கூறும்போது, என் மகன் இறந்தும் எட்டு பேருக்கு உயிர் கொடுத்து உள்ளார் என நெகிழ்ச்சி யோடு தெரிவித்தார். மேலும், தனது குடும்பத்தை வழி நடத்தி வந்த மகன் உயிரிழந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்ப தாகவும், தனது இரண்டாவது மகனுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.