கோவை, நவ.24- சிறு, குறு தொழில் முனைவோர் களிடம் தனியார் வங்கிகள் கடுமை யாக நடந்து கொள்கிற நிலையில், ஆட்சியர் உரிய தலையீடு செய்ய வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேட்டுக்கொண்டார். கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் வியாழ னன்று, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்தார். அப் போது மாவட்டத்தில் உள்ள பல் வேறு பிரச்சனைகள் குறித்து ஆட்சி யர் கவனத்திற்கு கொண்டு வந்தார். குறிப்பாக, சூலூர் அருகில் உள்ள ஆச்சான்குளம் கோவையின் முக்கிய குளங்களில் ஒன்று. 396 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. இக்குளத் தில் பாதியளவே நீர் நிறைந்து உள் ளது. குளத்தை முறையாக தூர் வாரினால் குளத்தில் முழு கொள்ள ளவிற்கும் நீரை சேகரிக்க முடியும்.
அதனால் சுற்று வட்டார விவசாய நிலங்கள் பயன்பெறும். இதே போன்று, வெள்ளகிணறு பகுதி யில் நீர்நிலை புறம்போக்கு இடத் தில் குடியிருந்து வரும் பொதுமக்க ளுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுத்திட வேண்டும். பெரிய நாயக்கன்பாளையம் மேம்பாலம் பகுதியில் அணுகுசாலையை உட னடியாக அமைத்திட வேண்டும். கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களிடம் தனியார் வங்கி நிர்வாகங்கள் கடு மையான முறையில் நடந்து கொள் கின்றன. சமீபத்தில், தொழில் முனை வோர் ஒருவரின் வீட்டை பூட்டி, தெருவில் நிறுத்தியதை குறிப் பிட்டு, இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய தலையீட்டை செய்ய வேண்டும். இதேபோல், அன் னூர் பேரூராட்சி, 5 ஆவது வார்டு புவனேஸ்வரி நகர் பகுதியில் தேங் கியுள்ள மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச் சனைகள் குறித்து ஆட்சியரின் கவ னத்திற்கு கொண்டு சென்றார். இதனை கேட்டறிந்த ஆட்சியர், கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உரிய நடவ டிக்கை மேற்கொள்வதாக தெரிவித் தார். இச்சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். கனகராஜ், மாவட்டக்குழு உறுப் பினர்கள் என்.ஜாகீர், மகேஷ்வரன், சிபிஎம் மாநகராட்சி மாமன்ற உறுப் பினர் வி.ராமமூர்த்தி, கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச் சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
தென்னக ரயில்வே மேலாளருக்கு கடிதம்
சேலம் கோட்ட தென்னக ரயில்வே மேலாளருக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுதியுள்ள கடிதத் தில் தெரிவித்திருப்பதாவது, வடகோவை ரயில் நிலையத்தில் தற் போது பல்வேறு புதிய வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின் றது. ரயில் நிலையத்தை மேட்டுப்பாளையம் சாலையுடன் இணைக் கும் விதமாக நடைபாதை மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வரு கின்றது. மேட்டுப்பாளையம் சாலையில், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த சாலை வழியாக கணிசமான பயணிகள் தின மும் வடகோவை ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு பயண சீட்டு வாங்க மேம்பாலம் வழியாக முன்பகுதிக்கு வந்து பயண சீட்டு வாங்கி பிறகு நடை பாதைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் நடைபாதை மேம்பாலம் துவங்கும் இடத்தில், ஒரு பயண சீட்டு அலுவலகம் புதியதாக அமைத்தால் பயணிகளின் அலைச்சல் தவிர்க்கப்படும். இது குறித்து உரிய ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.