திருப்பூர், ஜன.25- திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் அண்ணாமலை, ஜி.என்., திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் கடந்த 17ஆம் தேதி தாராபுரம் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதைமணல் மற்றும் சூழலில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று மதி யம் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட் சியின் மாவட்ட செயலாளர் செ.முத் துக்கண்ணன், தெற்கு ஒன்றிய செய லாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் க.கணேசன் உள்ளிட் டோர் விபத்தில் பலியான சிறுவர்களின் குடும்பத்தாரின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இளம் வயதில் பலியான அந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு அரசிடம் வலியு றுத்தி உரிய நிவாரணம் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக பி.ஆர். நடராஜன் எம்.பி., கூறினார். இந்த சந் திப்பின்போது அண்ணாமலை, திரு மலை, ஜி.என்.கார்டன் பகுதி குடியிருப் போர் நல சங்க நிர்வாகிகளும் உடனி ருந்தனர்.