கோவை, பிப்.16- கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய ரேசன் கடை கட்டிடத் திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் நிறை வுற்று, திறப்பு விழா வியாழ னன்று நடைபெற்றது. இதனை பி.ஆர்.நடராஜன் எம்.பி., திறந்து வைத்தார். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கணபதி காமராஜபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் புதிய ரேசன் கடைக்கான கட்டி டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, பி.ஆர்.நடராஜன் எம்.பி., புதிய ரேசன் கடைக் கான கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டது. இதற் கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், ரேசன் கடைக்கான புதிய கட்டி டத்தை வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மத் திய மண்டல துணை ஆணையாளர் மகேஸ் கண்ணன், உதவி பொறியாளர் சரவணக் குமார், 31 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் வைரமுருகன், 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வெ.இராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன், வடக்கு நக ரச்செயலாளர் சுந்தரம் மற்றும் சிபிஎம், திமுக பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.