கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் ஊடகவியலாளர்களின் பள்ளி மாணவர்க ளுக்கு புத்தக பை மற்றும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு வியாழனன்று வழங்கப் பட்டது. கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகி ரபீக், கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா, மாநகராட்சி செய்தி தொடர்பு அதிகாரி பாரதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு தொகுப்பை வழங்கி உரையாற்றினர். இதில் ஏராளமான ஊடகவியலா ளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.