districts

img

சேலத்தில் நம்ம ஊரு புத்தக கண்காட்சி துவக்கம் 50 ஆயிரம் தலைப்புகளில் ஐந்து லட்சம் புத்தகங்கள்

சேலம்,ஏப்.16- உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு சேலத்தில் நம்ம ஊரு  புத்தகத் திருவிழா 2022 என்ற பெயரில் புத்தக கண்காட்சி சனியன்று துவங்கியது. சேலம் ரோட்டரி ஹாலில் நடைபெறும் இந்த கண் காட்சியில் கவிதைகள், வரலாறு, நாவல்கள், தன்னம்பிக்கை, தொழில் முனைவோர் புத்தகங்கள் உள்ளிட்ட 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஐந்து லட்சம் புத்த கங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு பயன்பெறும் வகையில்  சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சி  மே மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.