கோவை, ஜூன் 10 - கோவை வெள்ளளூரில், புத்தக கண்காட்சி மற்றும் குடும்ப பொழுது போக்கு திருவிழா 2023 நிகழ்வு வெகு சிறப் பாக நடைபெற்றது. சிபிஇ சக்தி பில்டர் - வெள்ளலூர் இலக்கிய மன்றம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் இவ் விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள காம ராசர் திருமண மண்டபத்தில் சனியன்று துவங்கி நடை பெற்று வருகிறது. இந்நிகழ்வில் பட்டி மன்றம், கருத்தரங்கம், கவியரங்கம், மாணவர்களுக்கான போட்டிகள், சிறப்பு நடனம் மற்றும் இன்னிசை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் புத்தக விற்பனை, இயற்கை முறையில் தயாரிக்கபட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மரசெக்கு, எண்ணெய் வீட்டு அலங்கார பொருட்கள், குழந்தைகளுக் கான தின்பண்டங்கள் என சிறப்பு விற்பனை கடைகள் அமைக்கபட்டுள்ளன. இந்நிகழ்வின் முன்னதாக, கவிஞர் வெ.கு.முனுசாமி வரவேற்றார். வெள்ளலூர் இலக்கிய மன்றத்தின் நிறுவனர் வெ.கோ.பாலதண்டபாணி நிகழ்வின் நோக்க உரையாற்றினார். பெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி.ஆர்.நடராஜன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு சிபிஇ சக்தி பில்டர் ராஜ்குமார் மற்றும் காஞ்சனா ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌரவிக்கின்றனர். இந்நிகழ்வில், குடும் பத்துடன் பெருந்திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.