districts

img

ஆக.10ல் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்: அடிமனை வாடகைதாரர்கள் சங்கம் முடிவு

கோவை, ஜூலை 26- நில அடங்கல் கேட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று கூள நாயக்கன்பட்டியிருந்து கோலார்பட்டி வரை பேரணியாக சென்று பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து சமய அடிமனை வாடகைதாரர்கள் சங்கம் தெரி வித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, கூளநாயக்கன் பட்டி கிராமத்தில் அனைத்து சமய அடிமனை வாடகைதாரர் கள் குத்தகைதார்கள் சங்க கிளை அமைப்பு கூட்டம் வி.முத்து குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிசாமி துவக்க உரை யாற்றினார். கே.முரளிதரன் வரவேற்றார். வி.பாலகுருசாமி வாழ்த்துரையாற்றினார். இக்கூட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலும், அதைச்சார்ந்த நிலங்களையும் 29 குடும் பங்கள் அனுபவித்து வருகின்றனர். ஆகவே, இக்கோயில் நிலங்களுக்கான அனுபவ உரிமையை பாதுகாக்க வேண் டும். நீண்ட காலமாக அனுபவத்தில் இருக்கிற நிலங்களுக்கு  அடங்கல் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுத்து  வருகிறார். இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. இதனால் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று கூள நாயக்கன்பட்டியிலிருந்து கோலார்பட்டி வரை நடை பயண மாக சென்று, நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு  அடங்கல் கோரி கண்டன முழக்கம் செய்வது என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவராக எம்.குண சேகரன், செயலாளராக கே.முரளிதரன், பொருளாளராக வி.முத்துக்குமார், துணைத்தலைவராக கலைச்செல்வி, துணைச்செயலாளராக ப.ராதாமணி ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் நிறைவுரையாற்றினார். ப. ராதாமணி நன்றி கூறினார்.