districts

img

நெரிஞ்சிப்பேட்டை – பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

ஈரோடு, ஜூலை 30- காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் பாது காப்பு கருதி நெரிஞ்சிப்பேட்டை - பூலாம் பட்டி இடையிலான படகு போக்குவரத்து தற் காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் காவிரியில் நீர்வரத்து அதிக ரித்ததால், 43 ஆவது முறையாக மேட்டூர் அணை முழுக்கொள்ளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில், அணையிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 46 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி  ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட் டம், நெரிஞ்சிபேட்டைக்கும் - சேலம் மாவட் டம், பூலாம்பட்டிக்கும் இடையில் காவிரி  ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகு  போக்குவரத்து திங்களன்று முதல் தற்காலி மாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இருபுற மும் பயணிக்கும் பொதுமக்கள் நெரிஞ்சிப் பேட்டை கதவணை நீர்மின் நிலைய பாலம்  வழியாகச் சென்று வருகின்றனர்.