districts

img

தியாகி பன்னீர்செல்வம் நினைவு தினத்தில் ரத்ததானம் முகாம்

திருப்பூர், மார்ச் 17- திருப்பூர் கேத்தம்பாளையம் தியாகி பன்னீர்செல்வத்தின் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிஐடியு பனியன்  தொழிலாளர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. பனியன் தொழிலாளர்களின் உரிமைக்காக உயிர்நீத்த தோழர் பன்னீர்செல்வத்தின் 25 ஆம் ஆண்டு நினைவு தினமான  வெள்ளியன்று இம்முகாம் நடைபெற்றது. சிஐடியு பனியன்  தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத் தலை மையில் நடைபெற்ற இந்த முகாமில் மருத்துவக்கல்லூரி முதல்வர் முருகேசன், சிஐடியு பனியன் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் வாழ்த்துத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன், வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் ரேவந்த், ஒன்றிய செயலாளர் சந்தோஷ் உட்பட மொத்தம் 28 பேர் ரத்த தானம் செய்தனர்.