districts

img

அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கும் கழிவுநீர்: மக்கள் சாலை மறியல்

அவிநாசி, மார்ச் 21– அவிநாசி சூளை அடுக்குமாடி குடியி ருப்புகளில் இருந்து வெளியேறும் கழி வுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திங்க ளன்று சேவூர் சாலையில் அமர்ந்து திடீர்  மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு  வாரியம் மூலமாக இங்கு 448 வீடுகளு டன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு முறையான சாக்கடை  வசதியில்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு களுக்கு மத்தியில் குளம் போல தேங்கி  நிற்கிறது. இதனால் அப்பகுதி சேறும் , சகதியுமாக துர்நாற்றத்துடன், சுகாதார  மின்றி காணப்படுகிறது. இதனை உடன டியாக சீரமைக்க வேண்டும் என அப்ப குதி மக்கள் தொடர்ந்து முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதையடுத்து அடிக்குமாடி மக்கள்,  குழந்தைகள் என 300க்கும் மேற்பட் டோர், குடியிருப்பு எதிரே உள்ள அவி நாசி சேவூர் சாலையில் அமர்ந்து மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும்  காவல் துறை யினர், நகர்புற மேம்பாட்டு வாரிய அலு வலர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் குழாய், லாரி மூலம் கழி வுநீர் வெளியேற்றப்படும். நிரந்தரத் தீர் வாக மூன்று மாத காலத்திற்குள் திட்டத் திற்கு தேவையான நிதி பெற்று, கழிவு நீரை சுத்தகரித்து வெளியேற்றத் தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என உறுதியளித்தனர். இதை யடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.