districts

img

ஆட்சியர் அலுவலகம் முன்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மறியல்

தருமபுரி, பிப்.21- பார்வையற்ற கல்லூரி மாண வர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தி னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலுள்ள ஒருங்கி ணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி களில் பணியாற்றும் மொத்த ஆசிரி யர்களை கணக்கிட்டு அரசாணை நிலை எண்:20, நாள்:24.7.2023ஐ பின் பற்றி, பார்வையற்றோர்களுக்கு ஒரு  சதவிகித இடஒதுக்கிடு அடிப்படை யில், ஆயிரம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி நிய மனம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பார் வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்விலிருந்து முழுமையாக விலக் களித்து, உடனடியாக பட்டதாரி ஆசி ரியர் பணிநியமனம் வழங்க வேண் டும். வேலை இல்லாதோருக்கான உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விலை வாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களில் மாதந்திர  உதவித்தொகை வழங்குவதுபோல், தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாண வர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின்  சார்பில் பிப்.12 ஆம் தேதி முதல் உண் ணாவிரதப் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக இச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெற்றிவேல் முரு கன், ஞானமூர்த்தி, முனுசாமி உள் ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு, சேலம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளித்தனர்.