கோவை, அக்.19- பாஜக தலைவர் அண்ணா மலையை வரவேற்று போக்கு வரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூராக பாஜவினர் வைத்த பேனரை போலீசார் அகற்றி, வாக னத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால், பாஜக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால், அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டு பள்ளிரக்கர ணையை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், தனது மகன் திருமண வரவேற்புக்காக முதல்வர் மற்றும் துணை முதல் வரை வரவேற்று ரேடியல் சாலை முழுவதும் அனுமதி பெறாமல் பேனர் வைத்திருந்தார். இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுபஸ்ரீ (23), பொறியாளர். இவர், செப்டம்பர் 12ஆம் தேதி யன்று துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் ரேடியல் சாலையில் மதியம் 3 மணிக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை அருகே வந்தபோது சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த திருமண வர வேற்பு பேனர் ஸ்கூட்டி மீது விழுந்து, இதனால் நிலைதடுமாறி சாலை யில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட கவுன்சிலரை கைது செய்யுமாறு கூறியது. மேலும், பொது இடங் களில் சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போர்டுகளை பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைப்பதை தடை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழ னன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதி யில் நடைபயணம் மேற்கொள்வ தையொட்டி, கருமத்தம்பட்டி பகுதி யில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்களை பாஜகவினர் வைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக இந்த பேனர்கள் வைத்திருப்பது பொது மக்களிடையே எரிச்சலை உரு வாக்கியிருந்தது. இதனையடுத்து,
காவல்துறை மற்றும் நகராட்சி அனுமதி இன்றி சாலை ஓரங்களில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டதால் பேனரை எடுத்து வந்த மினி சரக்கு வாகனங்களை கருமத்தம்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, பறிமுதல் செய் யப்பட்ட வாகனங்களை விடுவிக் கக்கோரி பாஜகவினர் கருமத்தம் பட்டி நால் ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதி வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாஜக வினர் மிரட்டி அங்கேயே நிறுத்திய தால் பொதுமக்களுக்கும், பாஜக வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி மற்றும் காவல் ஆய்வாளர் அன்னம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கலைந்து செல்லாததால் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமை யில் பேசினர். இதனால் கோபமான போலீசார் கலைந்து செல்லவில்லை யென்றால் கைது செய்து கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, பாஜக வினர் அங்கிருந்து நழுவினர்.