districts

“நவீன மனிதர்கள்” அமைப்பினர் மீது தாக்குதல்

திருப்பூர், ஏப். 7 - திருப்பூரில் “வேண்டாம் மோடி,  பை பை மோடி!” என்ற பதாகையை  கிழித்தும், நவீன மனிதர்கள் இயக்க  ஊழியரின் சட்டையைக் கிழித்தும்,  தாக்குதல் நடத்தி பாஜக கும்பல் அட்டூழியம் செய்த சம்பவம் அறுவ ருப்பை ஏற்படுத்தியுள்ளது. மதவெறி பாசிச ஆட்சிக்கு எதி ராக, இந்தியா கூட்டணிக்கு மக்கள்  வாக்களிக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி நவீன மனிதர்கள் என்ற  அமைப்பினர் திருப்பூரில் நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். சனியன்று மாலை திருப்பூர் தெற்கு சட்டமன் றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டுவ ளவு, திருவிக நகர், வெள்ளியங் காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சா ரம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக காட்டுவளவு பகுதியில் பிரச்சார வாகனத்தை நிறுத்தி விட்டு, சற்று தொலைவில் நவீன  மனிதர்கள் அமைப்பினர் கூடியிருந் தனர். அப்போது அந்த பகுதி யில் பாஜக வேட்பாளர் முருகா னந்தத்தின் பிரச்சார வாகனம் வந்தது. நவீன மனிதன் அமைப்பின் ஊழியர்கள் இருவரும் “வேண் டாம் மோடி, பை, பை மோடி!” என்ற  வாசகம் அச்சிடப்பட்ட டிசர்ட் அணிந்து, அதே வாசகம் கொண்ட பதாகையுடன் இருந்த பிரச்சார வாகனத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, பாஜக பிரச்சார வாகனத்தில் வந்த  கும்பல், இதைப்பார்த்து சகிப்புத் தன்மை இல்லாமல் ஆத்திரத்து டன் கீழே இறங்கி வந்து, மோடியை  வேண்டாம் என்று சொல்வதா? மோடியைப் பற்றி பேசக் கூடாது என்று கூச்சலிட்டபடி வாகனத்தில் ஏறி பதாகையைக் கிழித்தனர்.  அத்துடன் அங்கிருந்த ஊழியர் களின் டிசர்ட்டையும் பிடித்து இழுத்து கிழித்து தாக்குதல் நடத்த  முற்பட்டனர். அத்துடன் கொடி களை எடுத்துக் கொண்டும் வாக னத்தின் சாவியை பறித்துக் கொண் டும் சென்றனர். இதைப்பார்த்து சற்று தொலைவில் நின்றிருந்த நவீன மனிதர்கள் அமைப்பினர் மற் றும் இந்தியா கூட்டணி கட்சியி னர் உடனடியாக சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்தனர். பாஜகவின ரின் அராஜக செயலுக்கு கடும்  கண்டனம் தெரிவித்தனர். பாஜக  பிரச்சார இயக்கத்துக்கு பாதுகாப் புக்கு வந்த திருப்பூர் தெற்கு காவல்  நிலையத்தினர் இரு தரப்பையும் விலக்கி விட்டனர். எனினும் பாஜக வினரின் அராஜக அட்டூழிய செய லைத் தடுத்து நடவடிக்கை எடுப்ப தற்கு மாறாக, நவீன மனிதர்கள் அமைப்பினரை அங்கிருந்து வில கிச் செல்லும்படி கூறியது அதிருப் தியை ஏற்படுத்தியது. எனினும் திட்டமிட்ட பகுதிகளில் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும், வெள்ளியங்காடு பகுதி யில் நவீன மனிதர்கள் அமைப்பி னர், இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்குத் திரண்டி ருந்தபோது, அந்த வழியாக பாஜக  வேட்பாளர் முருகானந்தம் வாக்கு சேகரிக்க வந்தார். அவருடன் வந்த  அமமுக முன்னாள் மேயர் விசா லாட்சி, மிக இழிவாக தரம் தாழ்ந்து  பேசிக் கொண்டிருந்தார். பாஜக வுக்கு ஆதரவாக பேசுவதற்கு எது வும் இல்லாத நிலையில், பிழைப் புவாத அரசியல் நடத்தும், விசா லாட்சி தரம் தாழ்ந்து பேசியது  வழக்கமான அவரது பேச்சுபாணி  தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்று அப்பகுதி  பொது மக்கள் பேசிக் கொண்ட னர்.