கோவை, பிப்.23– கோவை மாநகராட்சி 100 வார்டு களுக்கான தேர்தலில் பாஜக 86 வார்டு களில் வைப்பு தொகையை (டெபாசிட்) இழந்து மக்களால் நிராகரிக்கப்பட்டுள் ளது. கோவை மாவட்டத்தில் ஒரு மாநக ராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூ ராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான தேர்தல் முடிவு கள் வெளியாக துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. முடிவில், கோவை மாநக ராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியது. குறிப் பாக, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மதி முக 3 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 2 இடங்களி லும், மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது
ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கிய அதிமுக
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சொந்த வார்டான 92 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிசெல்வன் 456 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார். அதே நேரம், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சி வார்டுக்கான தேர்தலில், அக்கட்சி ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒட்டு மொத்தமாக அதிமுக 99 வார்டுகளி லும், கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டி யிட்டன. இதில் அதிமுக வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது. இத னால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ் தையும் இழந்துள்ளது. இதைத் தவிர்த்து சுயேச்சையாக களமிறங்கிய எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வென்றது. அதேநேரம், கோவை தங்களின் வலு வான தளம் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த பாஜக, ஒரு வார்டில் கூட வெற்றியை பெறவில்லை. இதே போல், மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சி களும் ஒரு வார்டில் கூட வெற்றி பெறா தது மட்டுமின்றி, கடந்த காலங்களில் பெற்ற வாக்குகளை கூட தக்கவைக்க முடியாமல் படுதோல்வியை சந்தித் துள்ளது.
86 வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக
முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் 2 வார்டு களை வென்ற பாஜக, இம்முறை ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், 98 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் 86 பேர் தங்க ளது டெபாசிட்டை இழந்துள்ளனர். இதேபோல், நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. அனைத்து நகராட்சிகளிலும் பாஜக தோல்வியை தழுவியது. ஒட்டுமொத்தமாக, 33 பேரூராட்சிகளில் உள்ள 504 பதவி களில் வெறும் 5 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது. அதிகபட்ச மாக செட்டிபாளையம் பேரூராட்சியில் 2 இடங்களில் வென்றுள்ளது. அன் னூர், புலுவப்பட்டி, சிறுமுகை ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
தருமபுரியிலும் பாஜக டெபாசிட் இழப்பு
தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளில் திமுக 18 வார்டுகளிலும், அதிமுக 13 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுயேட்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். அதேநேரம், பாஜக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாததுடன், ஒன்றை மற்றும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே வாக்குகளை பெற்று அனைத்து பாஜக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.