பள்ளிபாளையம், ஏப்.30- பள்ளிபாளையத்தில், திரைப் படத்திற்கு இலவச டிக்கெட் வழங்குவதாகக் கூறி, மோடியின் மனதின் குரல் - 100 நிகழ்ச்சியை ஒலிபரப்பியதால் ரசிகர்கள் கூச்ச லிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி யின் மனதின் குரல் - 100 நிகழ்ச்சி ஞாயிறன்று வானொலி மூலம் ஒலி பரப்பப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி யினர் மனதின் குரல் நிகழ்ச்சியை நேரலை செய்து மக்களை திரட்ட பல்வேறு விதமான யுத்திகளை கையாண்டனர். இதன் ஒரு பகுதி யாக, மனதின் குரல் நிகழ்ச்சியை காண நேரடியாக அழைத்தால் யாரும் வரமாட்டார்கள் என அறிந்த பாரதிய ஜனதா கட்சி யினர் பள்ளிபாளையம் - திருச் செங்கோடு சாலையில் அமைந் துள்ள தனியார் சினிமா திரைய ரங்கில், மனதின் குரல் நிகழ்ச்சியை திரையிடுவது என முடிவு செய்த னர். அதற்காக சுமார் 500க்கும் மேற் பட்ட சினிமா டிக்கெட்களை பொது மக்களுக்கு இலவசமாக வழங் கினர். சினிமா டிக்கெட்டுகளை வழங்கும்போது மனதின் குரல் நிகழ்ச்சி திரையிடல் குறித்த விவரங் களை ஏதும் கூறாமல், சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ருத்ரன் திரைப்படத்தின் முதல் காலை காட்சி இலவசமாக திரை யிடப்படுவதாக கூறி டிக்கெட்களை வழங்கினர்.
இதனால், ரசிகர்கள் இலவச காட்சி தானே என ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் ஞாயி றன்று காலையில் திரையரங்கில் குவிந்தனர். இதனையடுத்து மனதின் குரல் திரையிடப்பட்டது. ரசிகர்கள் விளம்பர என நினைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ருத்ரன் படம் திரையிடப் படவில்லை என அறிந்த ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேற முயன்றனர். உடனே பாரதிய ஜனதா கட்சியினர், நிகழ்ச்சி இனி மேல் தான் தொடர உள்ளது. உட்கா ருங்கள் என அவர்களை சமரசம் செய்து உட்கார வைக்க முயன் றனர். மேலும், நீண்ட நேரமாக மனதின் குரல் தமிழாக்கம் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்ததால், பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் மொபைல் போனில் மூழ் கினர். அதனை அடுத்து 30 நிமிடங் களுக்கு மேலாக நீடித்த மனதின் குரல் நிகழ்ச்சியை முடிவுக்கு வந்தது. பின்னர், ருத்ரன் படம் திரையிடப்பட்டது. மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆட் கள் சேர்க்க முடியாமல் பாரதிய ஜனதா கட்சியினர் திரையரங்கில் இலவச டிக்கெட் கொடுத்து கூட்டம் சேர்த்த விஷயம் தற்போது பள்ளிபாளையத்தில் பேசு பொரு ளாக மாறி உள்ளது.