districts

img

ஊராட்சி தலைவர் மீது பாஜக தாக்குதல் பொதுமக்களின் போராட்டத்தால் கைது

கோவை, ஏப்.12- சட்டவிரோதமாக மண் எடுத்த பாஜகவினரை தட்டிக்கேட்ட ஊராட்சி மன்றதலைவரை தாக்கிய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா அருகே உள்ள முத்தூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அனுமதி பெறாமல் மண் எடுத்து வருவதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு சென்று கேட்டபோது, பாஜகவைச் சேர்ந்த 3 பேர் சக்திவேலை தாக்கியுள்ளனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், பாஜகவை சேர்ந்த கைலாஷ், காளிமுத்து, மயில்வாணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.