தருமபுரி, ஏப்.3- கடந்த 10 ஆண்டுகளில் எந்த வாக்கு றுதியையும் நிறைவேற்றாத பாஜக மற்றும் அதற்கு துணைபோகும் அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என தமிழக காங்கி ரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெ ருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து, பாலக் கோடு நகரில் செவ்வாயன்று தேர்தல் பிரச்சா ரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரி மைத்தொகைத் திட்டம், நகரப் பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஆனால், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பாஜக தலைவர்கள் பல வாக்கு றுதிகள் அளித்தனர். குறிப்பாக கருப்புப்ப ணத்தை மீட்டு அதிலிருந்து ஒவ்வொருவ ரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, எரி பொருட்களின் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால், எரி பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந் துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிக ரித்துள்ளது. இப்படி அளித்த வாக்குறுதிகள் எதையும் பாஜக ஆட்சியாளர்கள் நிறைவேற் றவில்லை. எனவே பாஜகவுக்கும், அவர்களுக்கு துணையாகவுள்ள அதிமுகவுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். திமுக தலை மையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும், என்றார். இந்நி கழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்டச் செயலா ளர் பி.பழனியப்பன், மாவட்டப் பொருளாளர் முருகன், பேரூராட்சித் தலைவர் பி.கே.முரளி, ஒன்றியச் செயலாளர் எம்.வி.டி. கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.