districts

img

கேட்டது எதுவுமே கிடைக்கவில்லை; தொழில் அமைப்புகள் மீது தாக்குதல் மட்டும்தான்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், புதனன்று ஒன்றிய நிதியமைச்சர் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நிதியறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட், தேர்தலுக்கான பட் ஜெட் என்று அரசியல் இயக்கங்களும், யானை  பசிக்கு சோளப்பொறி என தொழில்துறையின ரும், கேட்டது எதுவுமே கிடைக்கவில்லை என  பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மக்களின் அடிப்படை தேவையான கல்வி, சுகா தராம், வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு நிதி குறைப்பு செய்து, தனியார் மயமாக்கப்பட்ட ரயில்வே உள் ளிட்ட துறைகளுக்கு நிதியை அள்ளிக்கொடுத்து, கார்ப்ரேட்டுகளை கொளுக்க வைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியும் விமர்சனம் செய்துள்ளது. சிறு,குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில்கள் உள்ள கோவை மாவட்டம் ஒன்றிய பட்ஜெட் எப்படி இருக்கப்போகிறதோ, கேட்டது கிடைக்குமா என்பது போன்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதகாலமாக தொழில்துறையினர் மத்தியில் ஆர்வத்தை ஏற் படுத்தியிருந்தது.

அகில இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவர் டி.ராஜ்குமார்:

கிளஸ்ட்டர் அடிப்படை, வால்யூ செயின் அடிப்ப டையில் பொது தனியார் கூட்டாண்மை மூலம் மிக நீண்ட இழை பருத்தியின் உற்பத்தித் திறனை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் முயற்சி வர வேற்புக்குரியது. இந்தத் திட்ட அறிவிப்பின் முழு  விவரங்களை அறிந்து கொள்ள ஜவுளித் துறை  ஆவலாக உள்ளது. விவசாயிகளுக்கான சேமிப்பு  கிடங்கு கட்டமைப்புகள் உருவாக்குவது பற்றிய  அறிவிப்பானது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியின் தரத்தை மேம்படுத்தும். அதேநேரம் பருத்தி இறக்குமதி வரியை நீக்குவது பற்றிய அறிவிப்பு, ஜவுளி இயந்திரங்கள் மீதான இறக்குமதி வரி 7 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பது போன்றவை ஜவுளித் தொழில் துறையை பாதிக்கும் என்பதால் தொழில்துறை கவலை கொண்டிருக்கி றது.

மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் எம்.ஜெயபால்:

வேளாண்மை, ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி  ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ஜவுளித் துறையினர் பெரிதும் எதிர்பார்த்தி ருந்த பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து குறித்த அறிவிப்பு வராதது ஜவுளித் துறை சார்ந்தவர்களுக்கு  ஏமாற்றம் அளிக்கிறது.  சர்வதேச விலையில் பருத்தி, விஸ்கோஸ் இழை உள்நாட்டில் கிடைத்தால் மட்டுமே உலகளவில் போட்டியிட இயலும். மூலப்பொருள் விலை ஏற்றத்தி னால் ஜவுளித் தொழில் கடந்த ஓராண்டாகவே 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இயங்கி வருகிறது. இறக்குமதி கட்டுப்பாட்டை ரத்து செய்யாவிட்டால் கடந்த ஆண்டைப் போலவே மீண்டும் கடும் நெருக் கடி ஏற்படும் என்பதால் இந்த கூட்டத் தொடரி லேயே பருத்தி இறக்குமதிக்கு வரியை ரத்து செய்து அறிவிக்க வேண்டும்.

கோவை இந்திய தொழில் வர்த்தக சபை துணைத் தலைவர் சுந்தரம், கௌரவ செயலர் அண்ணாமலை:

எம்எஸ்எம்இ துறைக்கு அதிக நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தோம் அது நடை பெற்றுள்ளது. ஜிஎஸ்டி எதிரொலியாகவே மூலப் பொருள்களின் விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்து வருகிறது. எனவே ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தியிருந்தோம் அதுபற்றியும் மூலப் பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்து பற்றி யும் நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்தி ருக்கும். தொழில் துறையைப் பொறுத்த அளவில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்:

வங்கிப் பரிவர்த்தனை கட்டணம், கடன்களுக் கான வட்டி விகிதம் குறைக்கப்படாதது, மூலப்பொ ருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமலை எம்.ரவி:

வேளாண் புத்தொழில் வளர்ச்சிக்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உத்தேசித்திருப்பதைப் போல குறு,  சிறு, நுண் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நிதி அறிவிப்பை நடப்பு கூட்டத் தொட ரில் அறிவிக்க வேண்டும். மூலப் பொருள் விலை உயர்வைத் தடுக்க நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். இரண்டு, மூன்று பேர்களை பணியமர்த்தி நடத்தப்படும் தொழிற்கூடங்கள் பயன்பெறும் வகையில் இ.எஸ்.ஐ.யில் மாற் றம் கொண்டு வர வேண்டும். ஜிஎஸ்டி தாமதக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் டி.விக்னேஷ்:

எம்எஸ்எம்இ துறைக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. ரயில், போக்குவரத்து துறையின் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது தொழில் துறை யின் வளர்ச்சிக்கு உதவும். அதேநேரம் மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்:

கொரோனா தொற்று ஏற்படுத்திய தொழில் மந்த நிலை, பொருளாதார மந்தநிலை மறையாத நிலையில், குறுந்தொழில்முனைவோர்கள் பெரிதும் எதிர்பார்த்த வங்கிக் கடன், கரோனா கால கடன்கள் மீதான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. எம்எஸ்எம்இ கடன் உத்தரவாதத் திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கி யிருப்பது போதுமானது அல்ல. கே.ஒய்.சி. நடைமுறைகளை எளிமையாக்கு தல், தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையே.

இந்திய தொழில் வர்த்தக சபை

விவசாயம் மற்றும் சிறுதானிய உற்பத்திக்கான அறிவிப்புகள் வரவேற்க தக்கதாகவும், கொரனா காலத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் ஒப் பந்த பணிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்குவது தொடர்பான அறி விப்புகள் வரவேற்கத்தக்கது. செயற்கை நுண்ணறிவு, ரோபொ தொழில்நுட் பங்களுக்கு முன்று மையம் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர், அதில் ஒரு மையத்தை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும், மூலப்பொருள்கள் விலையேற்றம் குறித்த அறிவிப்பேதும் இல்லை என்பது ஏமாற்றமே. நாம் கேட்டது எல்லாம் கிடைக்காது ஆனால் இந்த பட்ஜெட் திருப்தியானது.