கோவை, ஏப்.26- வெயிலின் தாகம் அதிகமாக இருப்ப தால் வ.உ.சி உயிரியல் பூங்காவில் பறவை கள் உள்ள கூண்டுகளில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் ஆனந்த குளியல் போட்டு பற வைகள் குதுகலிக்கின்றன. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும் வெப்ப அலை வீசுவதாலும் பொதுமக்கள் முதல் அனைத்து உயிரினங்களும் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றது. இந்நிலையில், கோடை வெயிலையொட்டி வீட்டு மாடிகளில் நீரும், உணவும் வைத்து பறவைகளின் பசி, தாகத்தை தீர்க்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வ.உ.சி பூங்காவில் பற வைகள் மற்றும் உயிரினங்களுக்கு நீர் தொட் டியில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வரு கிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிக மாக இருப்பதால் அங்கு இருக்கக்கூடிய பற வைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் பறவைகள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கின்ற னர். பறவைகளும் பீச்சி அடிக்கும் நீரில் வெயி லின் தாகம் தாங்க முடியாமல் ஆனந்த குளிய லில் சந்தோசமாக குளித்து குதுகலித்தன.