districts

img

பில்கீஸ் பானுவின் மனஉறுதி பிரமிக்க வைக்கிறது - பி.ஆர்.நடராஜன் எம்பி., பேச்சு

கோவை, பிப்.28- நினைத்து பார்க்க முடியாத கொடூரத்தை நிகழ்த்தியவர்களை சிறைக்குள் தள்ளியே ஆகவேண்டும் என்கிற உறுதியோடு செயல் பட்ட பில்கீஸ் பானுவின் மன உறுதி பிர மிக்க வைப்பதாக, நூல் வெளியீட்டு விழா வில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார்.  வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் எழுதிய பில்கிஸ் பானு நீதியை தேடி நீண்ட  பயணம் நூல் வெளியீட்டு விழா, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய வழக்கறிஞர் சங்கம் (ஐஏஎல்),  தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.சிவசாமி தலைமையேற்றார். மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று நூலை வெளியிட்டு உரையாற்றினார்.  முன்னதாக, பி.ஆர்.நடராஜன் எம்பி.,  பேசுகையில், குஜராத் வழக்கில் பில்கீஸ்  பானு வின் மனஉறுதி பிரமிக்க வைக்கிறது.  நினைத்து பார்க்க முடியாத கொடூரத்தை நிகழ்த்தியவர்களை நீண்ட நெடிய போராட் டம் நடத்தி மிகப்பெரிய வெற்றி பெற்றுள் ளார். இந்த பில்கீஸ் பானு நடத்திய சட்டப்  போராட்டத்தினை அவர் சந்தித்த இன்னல் களை ஆவண படுத்த வேண்டும். குஜராத் வன்முறை சம்பவங்கள் அரங்கேற காரண மாக இருந்த மோடி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குகையில் தவமிருந்தார். தற் போது கடலுக்கு அடியில் தவமிருந்து மக் களை ஏமாற்றும் வேலையை செய்கிறார். மக்கள் அவருக்கு சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என்றார். இந்நிகழ்வில், தபெதிக பொதுச்செயலா ளர் கு.ராமகிருட்டிணன், அதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக்குமார், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட் டச் செயலாளர் பி. ஜோதி குமார்,  மாமன்ற  உறுப்பினர் சாந்தி சந்திரன், ஏஐடியுசி கே.எம்.செல்வராஜ், தமிழக ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் யு.கே.சிவஞா னம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், நூலாசிரியர் வழக்கறிஞர் சுப்ர மணியன் ஏற்புரையாற்றினார்.