கோவை, ஜூன் 29- 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். பல்கலைக்கழக பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென பாரதியார் பல்கலைக்கழக பணியாளர் கள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. பாரதியார் பல்கலைக்கழக பணியாளர் கள் நலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா, கோவை மாவட்டம், மருதமலை பகுதியில் வியாழனன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பெயர் பலகையை திறந்து வைத்து பேசுகையில், பல்கலைக்கழக பணியாளர்கள் அமைச்சர் களை சந்தித்து தெரிவிப்பதினால் மட்டுமே நம்முடைய கோரிக்கைகள் எளிதில் நிறை வேறும் என நினைக்கக்கூடாது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே பல்கலைக்கழகத்திற்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கான நில இழப்பீடு தொகையை இன்று வரையில் வழங்காமல் உள்ளது. அதேபோல பல்கலைக்கழக ஆசி ரியர்கள், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கை களுக்காக தொடர்ந்து போராடி வருகின்ற னர். அதேபோல அரசிடம் நாம் கோரிக்கை வைப்பதோடு, கோரிக்கை நிறைவேறும் வரை போராடி வெற்றியடைய வேண்டும் என தெரி வித்தார். இந்நிகழ்ச்சியின்போது சங்கத்தின் தலை வர்கள் பேசுகையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டு களாக ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப் பப்படாமல் உள்ளது.
மேலும், பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலி மற் றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி யாற்றி வரும் பணியாளர்களை, நிரந்தரம் செய் வதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள் ளது. இதற்கிடையே, பத்தாண்டுகள் தினக் கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படை யில் பணியாற்றி வருகின்ற பணியாளர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் தெரிவித் திருந்தார். ஆனால், இதுநாள் வரையில் பல் கலைகழக நிர்வாகமும், அரசும் பணியாளர் களை நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 300க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமி ழக முதல்வரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சி.பத்ம நாபன், வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செய லாளர் பி.ஜோதிகுமார், தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத் தலைவர் கே.பத்மநாபன், பாரதியார் பல் ்கலைக்கழக பணியாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் வி.ஆர்.கிருஷ்ண சாமி, பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங் கத்தலைவர் கே.வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் துணைச் செயலாளர் வி.கனகராஜ் நன்றி கூறினார்.