ஈரோடு தாலுகா, வெண்டிபாளையம் பகுதியில் பாலர் பூங்கா சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆர்.மாரிமுத்து தலைமை வகித்தார். பாலகர் பூங்கா அமைப்பாளர் என்.பாலசுப்ரமணி, வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகி பி.ராஜா, வீரபாண்டியன் மற்றும் பாலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாரதியர் வாழ்க்கை வரலாறு, கவிதைகள் பாலர்களின் மத்தியில் உரையாடப்பட்டது. பாலர் பூங்கா கிளை பொறுப்பாளர் ஆர்.அச்சுதன் நன்றி கூறினார்.