districts

img

பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக்.10- பீடி சுற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பீடி மற்றும் சுருட்டு தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீடி தொழிலை நம்பி உள்ள ஒரு கோடி தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாற்று வேலை திட் டத்தை உருவாக்க வேண்டும். பதிவு செய்யப்படாத சட்ட  விரோத பீடி உற்பத்தியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சூரம்பட்டி நால் ரோட்டில் ஈரோடு மாவட்ட பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சித்தாரா பேகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன்,  மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், மாவட்ட உதவிச்செயலா ளர் சி.ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.