ஈரோடு, அக்.28- கொடிவேரி அணையில் குளிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கொடிவேரி தடுப்பணை ஈரோடு மாவட் டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கிய மானதாக உள்ளது. வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாள்களில் ஏராளமான சுற் றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்ப ணைக்கு குடும்பத்துடனும், நண்பர்களுட னும் வந்து குளித்து மகிழ்ந்து செல் வது வழக்கம். இந்நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து கடந்த சில நாள்களாக அதிக அளவு தண்ணீா் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கொடி வேரி அணையில் தண்ணீா் அதிகளவு தண் ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 10 நாள்களாக கொடிவேரி அணை யில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் கொடி வேரியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து 10 நாள்களுக்குப் பிறகு தற்போது கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வரத் தொடங்கியுள்ளனர். கொல்லி மலை இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று கொல்லி மலை. இங்கு கடந்த ஒரு மாதமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கொல்லி மலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. இத னால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக் கப்பட்டது. கடந்த 5 நாட்களாக கொல்லி மலையில் மழை இல்லாத காரணத்தால் அரு வியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இத னால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள் ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்த னர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.