உடுமலை, மே 25- ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெ றும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வருவாய்த்துறையில் பராமரிக் கப்படும் பதிவேடுகளை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் வகையிலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்ப டும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜமாபந்தி நடத்தப்படுகி றது. நிதியாண்டில் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு ஜமாபந்தி அலுவலரி டம் ஒப்புதல் பெறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் பங்க ளிப்பு மற்றும் மனுக்கள் நேரடியாக பெறாமல் நடைபெற்றது. இந்த ஆண்டு வழக்கமான முறையில் ஜமாபந்தி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந் தது. இதற்காக, திருப்பூர் மாவட்டத் தில் தாலுகா வாரியாக அரசு அலுவ லர்கள் நியமிக்கப்பட்டு, 1431 பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி செவ்வா யன்று துவங்கியது. உடுமலை தாலுகாவிற்கான ஜமாபந்தி அலுவலராக வருவாய் கோட்டாச்சியர் கீதா நியமிக்கப் பட்டுள்ளார்.
உடுமலை, குறிச்சிக் கோட்டை, வாளவாடி, பெதப்பம் பட்டி, குடிமங்கலம் உட்வட்டம் வாரி யாக செவ்வாயன்று துவங்கிய ஜமா பந்தி மே 31 ஆம் தேதி வரை தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதன்படி, செவ்வாயன்று உடு மலை உள்வட்டத்திற்குட்பட்ட சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி, அந்தி யூர், வெனசுப்பட்டி, கணபதிபாளை யம், பெரியகோட்டை, உடுமலை, கணக்கம்பாளையம், வடபூதிநத் தம், தென்பூதிநத்தம், போடிபட்டி, கண்ணமநாயக்கனூர், பூலாங்கி ணர், ராகல்பாவி, ஆர்.வேலூர் ஆகிய கிராம மக்களுக்கான ஜமா பந்தி நடைபெற்றது. உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு குடிநீர், நாற்காலிகள் மற்றும் நிழற் பந்தல் ஆகிய எந்தவித அடிப்படை வசதிகள் எதுவும் அமைக்க வில்லை. மேலும், மாற்றுதிறனாளிகளுக் கென்று எவ்வித வசதியும் செய்யா மல் இருந்ததால் வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி வெறும் மனு வாங்கும் நிகழச்சியாக மட்டுமே நடைபெற் றது. மேலும், இனி ஜமாபந்தி நடை பெறும் நாட்களில் பொதுமக்க ளுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.